தமிழக அரசு பள்ளி ஆசிரியர்கள் கவனத்திற்கு – முதன்மை கல்வி அலுவலரின் முக்கிய உத்தரவு!
தமிழக அரசு பள்ளி ஆசிரியர்கள் மற்றும் தலைமை ஆசிரியர்கள் மே 20ம் தேதி வரை பள்ளிக்கு வரவேண்டும் என்று பள்ளிக் கல்வித்துறை தெரிவித்துள்ளது. இது குறித்து சிவகங்கை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அனைத்து பள்ளிகளுக்கும் அறிவுரைகளை வழங்கியுள்ளார்.
ஆசிரியர்கள் வருகை:
தமிழகத்தில் கடந்த 2020, 2021ம் ஆண்டுகளில் கொரோனா பெருந்தொற்று வேகமெடுத்து காரணத்தால் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது. இந்த நேரத்தில் ஆன்லைன் வகுப்புகள் நடைபெற்றதால் 10, 12ம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு ரத்து செய்யப்பட்டது. மதிப்பிட்டு முறையிலான மதிப்பெண்கள் வழங்கப்பட்டது. அதே போல 1 – 9 வரையிலான வகுப்பு மாணவர்களுக்கு ஆண்டு இறுதித் தேர்வு ரத்து செய்யப்பட்டு தேர்வின்றி தேர்ச்சி அறிவிக்கப்பட்டது. தற்போது கொரோனா பாதிப்புகள் குறைந்து வருவதால் பள்ளிகள் திறக்கப்பட்டு நேரடி வகுப்புகள் நடைபெற்று வருவதால் பொதுத் தேர்வுகள் நடத்த முடிவு செய்யப்பட்டது.
NPS திட்டத்தின் மூலமாக ரூ.1 லட்சம் ஓய்வூதியம் பெறுவது எப்படி? முழு விவரங்களுடன்!
அதற்கான கால அட்டவணையை பள்ளிக் கல்வித்துறை வெளியிட்டது. தற்போது அதன் படி 1 – 9 வரையிலான வகுப்பு மாணவர்களுக்கு கடந்த மே 2ம் தேதி ஆண்டு இறுதித்தேர்வு தொடங்கி கடந்த 13ம் தேதி முடிவடைந்தது. அதனை தொடர்ந்து மே 14 முதல் கோடை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் பள்ளி ஆசிரியர்கள் மற்றும் தலைமையாசிரியர்கள் மே 20ம் தேதி வரை பள்ளிக்கு வர வேண்டும் என்று பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. பள்ளிகளில் விடைத்தாள் திருத்தம், எம்மிஸ் பதிவேற்றம் உள்ளிட்ட வேலைகளை செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது.
Exams Daily Mobile App Download
பிற மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள் மே 16 முதல் 20 க்குள் மேற்கண்ட பணிகளை முடித்து விட்டால் விடுமுறை எடுத்துக் கொள்ளலாம் என்று தெரிவித்துள்ளனர். ஆனால் சிவகங்கை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மே 20 வரை பள்ளிக்கு ஆசிரியர்கள் கட்டாயம் வருகை புரிய வேண்டும் என்று தெரிவித்துள்ளார். இது குறித்த அறிவுரைகளை அனைத்து வட்டார கல்வி அலுவலர்களும் பள்ளிகளுக்கும் அனுப்பப்பட்டுள்ளது. இதனால் ஆசிரியர்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்.