தமிழக 12ம் வகுப்பு மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு – பள்ளிக் கல்வித்துறை வெளியீடு!!
தமிழகத்தில் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு பள்ளிகளில் நேரடி வகுப்புகள் நடைபெற்று வருகிறது. அதன்படி பள்ளிகளில் மாணவர்களிடையே தனி நபர் இடைவெளி அவசியம் என பள்ளிக் கல்வித்துறை அறிவுறுத்தியுள்ளது.
தனி நபர் இடைவெளி:
தமிழகத்தில் +2 மாணவர்களுக்கு மே மாதம் 3 ஆம் தேதி பொதுத்தேர்வுகள் நடைபெறவுள்ளது. அதன்படி பள்ளிகளில் பொதுத்தேர்வுகளை எழுதும் மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள் நடைபெற்று வருகிறது. மறு பக்கத்தில் நாடு முழுவதும் கொரோனா பரவலின் இரண்டாம் அலை வேகமெடுத்து வருகிறது. கொரோனவை கட்டுப்படுத்தும் விதத்தில் தமிழக அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. முன்னதாக பள்ளி மாணவர்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதை தொடர்ந்து, 9 மற்றும் 11ஆம் வகுப்பு மாணவர்களுக்காக திறக்கப்பட்ட பள்ளிகள் மீண்டுமாக மூடப்பட்டது.
TN Job “FB Group” Join Now
இந்நிலையில் பள்ளிகளில் ஒரே நேரத்தில் அதிகளவு மாணவர்கள் அமர வைக்கப்படுவதாக பள்ளிக் கல்வித்துறைக்கு தகவல்கள் கிடைத்துள்ளது. தற்போது பள்ளிகளில் மாணவர்களுக்கு தனி மனித இடைவெளி அவசியம் என பள்ளிக் கல்வித்துறை அறிவுறுத்தியுள்ளது. இதுகுறித்து பள்ளிக்கல்வித்துறை மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகள் தெரிவித்துள்ளதாவது, ‘ஒவ்வொரு வகுப்பறைகளிலும் 50 சதவீதம் இருக்கைகளுடன் 20 மாணவர்கள் மட்டுமே அமர வைக்கப்பட வேண்டும்.
கொரோனாவால் வாழ்வாதாரத்தை இழந்த ஆசிரியர்கள் – 10 லட்சம் குடும்பங்கள் தவிப்பு!!
ஒரு ஆசிரியர் மட்டுமே பாடம் நடத்த வேண்டிய சூழல் ஏற்பட்டால் கலையரங்கம் உள்ளிட்ட திறந்த வெளிமையங்களில் தனிநபர் இடைவெளியுடன் மாணவர்கள் அமர வைக்கப்பட வேண்டும். மாணவர்கள் பள்ளிக்குள் நுழையும் போது உடல் வெப்பநிலை பரிசோதிக்கப்பட வேண்டும். மாணவர்கள், ஆசிரியர்கள் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும். கொரோனா பாதிப்பு தென்படும் மாணவர்களை பள்ளிக்குள் அனுமதிக்க கூடாது. இதில் ஏதேனும் தவறுகள் ஏற்பட்டால் அந்தந்த பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள் பொறுப்பேற்றுக்கொள்ள வேண்டும்’ என அறிவுறுத்தியுள்ளது.