தமிழகம் முழுவதும் பள்ளிகளுக்கு கடும் எச்சரிக்கை – கல்வித்துறை அதிரடி உத்தரவு!

0
தமிழகம் முழுவதும் பள்ளிகளுக்கு கடும் எச்சரிக்கை - கல்வித்துறை அதிரடி உத்தரவு!
தமிழகம் முழுவதும் பள்ளிகளுக்கு கடும் எச்சரிக்கை - கல்வித்துறை அதிரடி உத்தரவு!
தமிழகம் முழுவதும் பள்ளிகளுக்கு கடும் எச்சரிக்கை – கல்வித்துறை அதிரடி உத்தரவு!

தமிழகத்தில் 10 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு நடைபெற்று வரும் திருப்புதல் தேர்வு வினாத்தாள் சமூகவலைத்தளத்தில் லீக் ஆனது குறித்து ஆய்வு மேற்கொண்ட பள்ளிக் கல்வித்துறை தேர்வுகள் தொடர்பாக தேர்வுத் துறை அளித்த வழிகாட்டுதல்களை பின்பற்றாத அரசு அலுவலர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துள்ளது.

கல்வித்துறை உத்தரவு:

தமிழகத்தில் கொரோனா 3வது அலை நடப்பு ஆண்டு ஜனவரி மாதத்திலேயே தொடங்க ஆரம்பித்து விட்டது. இதனால் பொதுமக்கள் பாதுகாப்புக்காக மீண்டும் கொரோனா கட்டுப்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டது. இதனை தொடர்ந்து பள்ளி, கல்லூரிகளுக்கு மீண்டும் ஜனவரி 31 வரை விடுமுறை அளிக்கப்பட்டது. இதனால் 10 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு, கடந்த ஜனவரி மாதம் நடைபெற இருந்த திருப்புதல் தேர்வு, ஊரடங்கு காரணமாக, பிப்ரவரி மாதத்திற்கு ஒத்தி வைக்கப்பட்டது. மேலும் அண்மையில் முதல்வர் தலைமையில் பள்ளி, கல்லூரிகள் திறப்பு குறித்து ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

நாளை (பிப்.16) பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்பு – அரசு முக்கிய உத்தரவு!

இந்த கூட்டத்தில் அனைத்து கல்வி நிறுவனங்களும் பிப்.1 முதல் திறக்கப்படும் என அறிவிப்பு வெளியானது . அந்த அறிவிப்பின் அடிப்படையில் பள்ளி, கல்லூரிகள் திறக்கப்பட்டு நேரடி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் பிப்.9 ஆம் தேதி முதல் தமிழகம் முழுவதும் திருப்புதல் தேர்வு தொடங்கி நடைபெற்று வருகிறது. இருப்பினும் இந்த திருப்புதல் தேர்வு வினாத்தாள் சமூக வலைதளங்களில் வெளியானது குறித்து சில தினங்களுக்கு முன்பு சர்ச்சை எழுந்தது.

TNPSC தேர்வுக்கு தயாராகி வருபவர்களுக்கு முக்கிய அறிவிப்பு – ஆதார் இணைப்பு கட்டாயம்!

இந்த சர்ச்சை குறித்து ஆய்வு மேற்கொண்ட பள்ளிக்கல்வித் துறை, திருவண்ணமலை மாவட்டம் போளூரில் உள்ள ஆக்சிலியம் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மற்றும் வந்தவாசியில் உள்ள ஹாசினி இன்டர்நேஷனல் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி ஆகிய இரண்டு பள்ளிகளில் இருந்து வினாத்தாள் வெளியானது கண்டறிப்பட்டது. இந்த நிலையில் பள்ளிகளை சேர்ந்த நபர்களின் மீது தக்க குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும் மற்றும் வெளியிடப்பட்ட அட்டவணையின் படி, திருப்புதல் தேர்வுகள் எவ்வித மாற்றமும் இல்லாமல் தொடர்ந்து நடைபெறும் என பள்ளிக் கல்வித்துறை ஆணையர் அறிவித்துள்ளார்.

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!