தமிழகத்தில் 6 முதல் 8ம் வகுப்பு மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு – பள்ளிக்கல்வித்துறை உத்தரவு!
தமிழகத்தில் மத்திய அரசின் புதிய கல்வி கொள்கையின் கீழ் 6 முதல் 8ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு வரும் ஜனவரி 5ம் தேதி முதல் மதிப்பீட்டு தேர்வு நடத்த தமிழக பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.
மதிப்பீட்டு தேர்வு:
தமிழகத்தில் கடந்த ஆண்டு பரவிய கொரோனா பெருந்தொற்று குறைந்து வருவதை தொடர்ந்து பள்ளி மற்றும் கல்லூரிகள் திறக்கப்பட்டுள்ளது. அதாவது கடந்த செப்டம்பர் மாதம் உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகள் திறக்கப்பட்டு மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது. அதனை தொடர்ந்து கடந்த நவம்பர் மாதம் தொடக்க மற்றும் நடுநிலை பள்ளிகள் திறக்கப்பட்டு மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது. கடந்த ஆண்டு மாணவர்களுக்கு பொதுத்தேர்வுகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டது. ஆனால் இந்த ஆண்டு 10, 11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு கட்டாயம் நடத்தப்படும் என்றும் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அவர்கள் ஏற்கனவே கூறியுள்ளார்.
இந்தியாவில் தீவிரமடையும் ஓமைக்ரான் நோய்த்தொற்று பரவல் – கேரளாவில் 9 பேருக்கு பாதிப்பு!
மேலும் நீண்ட நாட்களாக ஆன்லைன் முறையில் வகுப்புகள் நடத்தப்பட்டு வந்த நிலையில் தற்போது மாணவர்களின் கற்றல் நிலையை ஆசிரியர்கள் அறிந்து கொள்ளும் வகையில் திருப்புதல் தேர்வு நடத்தப்படும் என்றும் அறிவிக்கப்பட்டது. அதன்படி திருப்புதல் தேர்வுகள் நடைபெற்று வரும் நிலையில் தற்போது 6 முதல் 8ம் வகுப்பு மாணவர்களுக்கு மதிப்பீட்டு தேர்வு நடத்த பள்ளிக் கல்வித்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது. அதாவது மத்திய அரசு அறிமுகம் செய்துள்ள புதிய கல்விக்கொள்கையை அறிமுகம் செய்துள்ளது. இந்த முறையை தமிழகம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்கள் எதிர்ப்பு தெரிவித்து வந்தது குறிப்பிடத்தக்கது.
தமிழகத்தில் 82 பேருக்கு ஓமைக்ரான் தொற்று – சுகாதாரத்துறை அமைச்சர் அறிவிப்பு! பொதுமக்கள் அச்சம்!
ஆனாலும் புதிய கல்விக்கொள்கையை செயல்படுத்துவதில் மத்திய அரசு மும்முரமாக செயல்பட்டு வருகிறது. அந்த வகையில் புதிய கல்விக்கொள்கையின் கீழ் 6 முதல் 8ம் வகுப்பு மாணவர்களுக்கு மதிப்பீட்டு தேர்வு நடத்த வேண்டும் என்று முக்கிய அம்சம் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி தமிழகத்தில் வரும் ஜன.5ம் தேதி முதல் 11ம் தேதி வரை மதிப்பீட்டு தேர்வு நடத்த உத்தரவிட்டு அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. மொழிப்பாடங்கள் மதியம் 2 மணிக்கு தொடங்கி 3.15 வரையும், இதர பாடங்கள் மதியம் 2 மணிக்கு தொடங்கி 3 மணி வரைக்கும் நடத்தப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.