தமிழகத்தில் சுழற்சி முறையில் பள்ளிகள் திறப்பு – கல்வித்துறை எச்சரிக்கை!

0
தமிழகத்தில் சுழற்சி முறையில் பள்ளிகள் திறப்பு - கல்வித்துறை எச்சரிக்கை!
தமிழகத்தில் சுழற்சி முறையில் பள்ளிகள் திறப்பு - கல்வித்துறை எச்சரிக்கை!
தமிழகத்தில் சுழற்சி முறையில் பள்ளிகள் திறப்பு – கல்வித்துறை எச்சரிக்கை!

தமிழகத்தில் ஓமைக்ரான் பரவல் காரணமாக ஜனவரி 31 ஆம் தேதி வரை பள்ளி மாணவர்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்ட நிலையில் பிப்ரவரி 1 ஆம் தேதி முதல் மீண்டும் 1-12 வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டது. தற்போது பல அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் மீண்டும் சுழற்சி முறையில் பள்ளிகள் செயல்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது.

கல்வித்துறை எச்சரிக்கை:

இந்தியாவில் கொரோனா மற்றும் அதன் மறு உருவமான ஓமைக்ரான் பரவலும் பல்வேறு மாநிலங்களில் வேகமாக பரவி வருகிறது. இதில் குறிப்பாக மகாராஷ்டிரா, கர்நாடகம், தமிழ்நாடு, மத்தியப் பிரதேசம்,டெல்லி, உத்தரபிரதேசம், மணிப்பூர், ஹரியானா உள்ளிட்ட மாநிலங்களில் நோய்த்தொற்று அதிகரித்து வருகிறது. இதனால் மத்திய அரசு ஓமைக்ரான் பரவலை கட்டுப்படுத்த தேவைப்பட்டால் ஊரடங்கு கட்டுப்பாடுகளை அமல்படுத்தி கொள்ளலாம் என்று மத்திய சுகாதாரத்துறை பரிந்துரைத்துள்ளது. அதனால் தற்போது பல்வேறு மாநிலங்களில் புதிய ஊரடங்கு கட்டுப்பாடுகளை மாநில அரசு அமல்படுத்தி வருகிறது.

TN TRB தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்ற ஆசிரியர்கள் கவனத்திற்கு – பணி வரன்முறை!

இதனை தொடர்ந்து தமிழகத்தில் ஓமைக்ரான் பரவல் அதிகரித்து வந்ததால் அனைத்து வகுப்பினருக்கும் பள்ளிகள் திறக்கப்பட்ட நிலையில் கொரோனா 3 ஆம் அலை காரணமாக மீண்டும் மூடப்பட்டது. இதனை தொடர்ந்து பொது தேர்வு இல்லாத 1 முதல் 9 ஆம் வகுப்பு வரை மாணவர்களுக்கு பள்ளிகள் விடுமுறை விடப்பட்டு ஆன்லைன் மூலம் வகுப்புகள் நடத்தப்பட்டு வந்த நிலையில் அனைத்து பள்ளிகளில் பயிலும் 1 முதல் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பிப்ரவரி 1 ஆம் தேதி முதல் மீண்டும் பள்ளிகள் திறக்கப்படும் என்று தமிழக கல்வித்துறை அறிவித்தது. அதன்படி மாணவர்கள் பள்ளிக்கு சென்று வருகிறார்கள்.

12வது முடித்தவரா? – விமான நிறுவனத்தில் பணிபுரிய அரிய வாய்ப்பு..!

இந்நிலையில் பல அரசு மற்றும் தனியார் பள்ளிகளில், சில மணி நேரங்கள் மட்டுமே வகுப்பு நடத்துவதாக புகார் வந்துள்ளது. மேலும் பள்ளி மாணவர்களை சுழற்சி முறையில் மூன்று வேளைகளாக பிரித்து பாடம் நடத்தப்படுவதாக கூறப்படுகிறது. பல பள்ளிகளில் அரை நாள் மட்டுமே வேலை நாளாக பின்பற்றுவதாகவும், அதிலும் மாணவர்களை வரவைக்காமல் அலட்சியம் காட்டுவதாகவும் கூறப்படுகிறது. எனவே பாடங்களை முடிக்க மிக குறுகிய காலம் மட்டும் உள்ள நிலையில் பள்ளிகளில் சுழற்சி முறையில் வகுப்புகள் நடத்தப்பட்டால் தலைமை ஆசிரியர்கள் மீது கண்டிப்பாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழக கல்வித்துறை ஆணையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!