தமிழகத்தில் 8ம் வகுப்பு முடித்தவர்களுக்கான வேலைவாய்ப்பு – விண்ணப்பிக்க 25ம் தேதி கடைசி நாள்!
தமிழகத்தில் கொரோனா பரவல் குறைந்ததை தொடர்ந்து பல்வேறு வேலைவாய்ப்புகளை அறிவித்து வருகிறது. இதனை தொடர்ந்து தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள முன்னாள் படைவீரர் நல மருத்துவமனையில் உள்ள காலிப்பணியிடங்களை நிரப்ப உள்ளதாக அறிவித்துள்ளது.
வேலைவாய்ப்பு
தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக பல்வேறு இளைஞர்கள் வேலைவாய்ப்பு இழந்துள்ளார்கள். தற்போது கொரோனா பரவல் குறைந்ததை தொடர்ந்து பல்வேறு வேலைவாய்ப்பு அறிவிப்புகளை அறிவித்து வருகிறது. இதனை தொடர்ந்து தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள முன்னாள் படைவீரர் நல மருத்துவமனையில் மருத்துவர், செவிலியர், மருந்தாளுநர் உள்ளிட்ட பணியிடத்தில் காலியாக இருக்கும் இடங்களை நிரப்ப உள்ளதாக அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இப்பணிக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.
SBI வங்கியில் ரூ.36 ஆயிரம் சம்பளத்தில் உதவி மேலாளர் வேலை – 48 காலிப்பணியிடங்கள்!
இதில் மருத்துவ அலுவலர் பணிக்கு MBBS படிப்பும், பல் மருத்துவ அலுவலர் பணிக்கு BDS படிப்பும், செவிலியர் உதவியாளர் பணியிடத்திற்கு Diploma/ Class 1 Physiotherapy courses படிப்பும், மருந்தாளுநர் பணியிடத்துக்கு Diploma in Pharmacy or Degree in Pharmacy படிப்பும் முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். இப்பணிக்கு தகுதியான நபர்களை நேர்முகத் தேர்வு அடிப்படையில் தேர்வு செய்ய வேண்டும். மேலும் இப்பணிக்கு தற்காலிக அடிப்படையில் பணியிடங்கள் நிரப்பப்படுகிறது. இதில் நியமிக்கப்படுவர்களுக்கு ரூ.16,800 முதல் ரூ.75,000 வரை சம்பளம் வழங்கப்படுகிறது.
தமிழக கூட்டுறவு வங்கிகளில் நகைக்கடன் தள்ளுபடி பெற்றோர் கவனத்திற்கு – முக்கிய அறிவிப்பு!
இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்புவர்கள் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்துடன் சுய விவரக்குறிப்பு மற்றும் தேவையான ஆவணங்களுடன் SO ECHS (ECHS Cell), Air Force Station, Pudukkottai Road, Thanjavur – 613005 என்ற முகவரிக்கு பதிவு தபால் மூலமாக அனுப்ப வேண்டும். மேலும் இதற்கு விண்ணப்பிக்க பிப்ரவரி 25ம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும். இப்பணியில் குறைவான அளவில் தான் காலிப்பணியிடங்கள் உள்ளதால் வேலையில்லா இளைஞர்கள் விரைந்து விண்ணப்பிக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்ளப்படுகிறன.