தமிழகத்தில் 10, 11 & 12ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதவுள்ள மாணவர்கள் கவனத்திற்கு – கல்வித்துறை அறிவிப்பு!
10, 11 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு நெருங்கிக்கொண்டிருக்கிறது. இந்நிலையில் தனியார் பள்ளிகள் பொதுத் தேர்வு எழுதும் மாணவர்களுக்கு ஹால் டிக்கெட்டை கொடுக்க மறுத்தால் அந்த பள்ளியின் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என பள்ளி கல்வித்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
பொதுத்தேர்வு:
தமிழகத்தில் கடந்த இரண்டு ஆண்டுகளாகவே கொரோனா தொற்றின் காரணமாக தமிழகத்தில் உள்ள எந்த பள்ளியும் திறக்கப்படவில்லை. இதனால் மாணவர்களுக்கு ஆன்லைன் மூலமாக தான் பாடம் கற்பிக்கப்பட்டு வந்தது. மேலும், இரண்டு ஆண்டுகளுமே பள்ளி மாணவர்களுக்கு பொதுத் தேர்வு எதுவும் நடத்தப்படாமல் அனைவரும் தேர்ச்சி அறிவிக்கப்பட்டது. ஆனால், இந்த ஆண்டு கண்டிப்பாக பள்ளி மாணவர்களுக்கு பொதுத் தேர்வு நடத்தப்படும் எனவும், அதற்கான அட்டவணையும் சமீபத்தில் பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டிருந்தது.
இந்தியாவில் மீண்டும் முழு ஊரடங்கு அமல்? தீவிரமெடுக்கும் கொரோனா பரவல்!
10 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத் தேர்வு வரும் மே 6 ஆம் தேதியும், 11 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத் தேர்வு மே 9 ஆம் தேதியும், 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத் தேர்வு மே 5 ஆம் தேதியும் தொடங்க இருக்கிறது. 10, 11 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்விற்கு இன்னும் சில நாட்களே இருப்பதால் பள்ளி மாணவர்கள் அனைவரும் பொதுத் தேர்வுக்கு தயாராகி வருகின்றனர் இந்நிலையில் பொதுத்தேர்வு எழுதும் மாணவர்கள் அந்தந்த பள்ளிகளிலேயே இணையதளத்தில் ஹால் டிக்கெட்டை பதிவிறக்கம் செய்து கொள்ளும்படியான வசதியை ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டுள்ளது.
Exams Daily Mobile App Download
இந்நிலையில் சில தனியார் பள்ளிகளில் நடத்தை மற்றும் முழுமையாக கல்வி கட்டணம் செலுத்தாத மாணவர்களுக்கு கல்விக் கட்டணத்தை செலுத்திய பின்பு தான் ஹால்டிக்கெட் வழங்கப்படும் என அறிவித்துள்ளனர். இந்நிலையில் பொதுத் தேர்வு எழுத இருக்கும் மாணவர்களுக்கு தனியார் பள்ளிகள் ஹால் டிக்கெட் கொடுக்க மறுத்தால் அந்த பள்ளியின் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என பள்ளி கல்வித்துறை அறிவித்துள்ளது.