தொலைநிலைக் கல்வி மாணவர்களுக்கும் அரியர் தேர்வுகள் ரத்தா ?????

0
தொலைநிலைக் கல்வி மாணவர்களுக்கும் அரியர் தேர்வுகள் ரத்தா
தொலைநிலைக் கல்வி மாணவர்களுக்கும் அரியர் தேர்வுகள் ரத்தா

தொலைநிலைக் கல்வி மாணவர்களுக்கும் அரியர் தேர்வுகள் ரத்தா ?????

தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்றின் காரணமாக அனைத்து கல்வி நிறுவனங்களும் மூடப்பட்டன. இதனால் மாணவர்களுக்கு தேர்வுகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டு தேர்ச்சி ஆனது ஆல்பாஸ் என வழங்கப்பட்டது. இதனால் மாணவர்கள் தரப்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது.

சமீபத்தில் இறுதி ஆண்டு தேர்வுகளை தவிர அனைத்து பருவ அரியர் தேர்வுகளுக்கு கட்டணம் செலுத்தி இருந்தாலும் விலக்கு அளிக்கப்பட்டது. இந்த அறிவிப்பு மாணவர்கள் மத்தியில் பெரும் வரவேற்பையும், மகிழ்ச்சியினையும் ஏற்படுத்தி தந்துள்ளது.

ஆனால் இந்த உயர்கல்வி துறையின் அறிவிப்பு ஆனது தொலைநிலைக் கல்வி பயிலும் மாணவர்களுக்கும் பொருந்துமா என குழப்பம் ஏற்பட்டது. மொத்தம் 14 பல்கலைக்கழகங்களின் கீழ் 4.3 லட்ச மாணவர்களில் இறுதி ஆண்டினை தவிர்த்து 3 லட்ச மாணவர்கள் உள்ளனர். அவர்களில் அனைவர்க்கும் இந்த அறிவிப்பு பொருந்தும் என உயர் கல்வித்துறை அதிகாரிகள்
தெரிவித்து உள்ளனர்.

இந்த குறைந்த மதிப்பெண் முறை வேண்டாம் என்றால் தேர்வு எழுத விரும்புபவர்களுக்கும் பிரத்யேக ஏற்பாடு செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் தொலைநிலைக் கல்வி மாணவர்களும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!