தமிழகத்தில் 55 காவல் அதிகாரிகள் இடமாற்றம் – டிஜிபி உத்தரவு!!

0
தமிழகத்தில் 55 காவல் அதிகாரிகள் இடமாற்றம் - டிஜிபி உத்தரவு!!
தமிழகத்தில் 55 காவல் அதிகாரிகள் இடமாற்றம் - டிஜிபி உத்தரவு!!
தமிழகத்தில் 55 காவல் அதிகாரிகள் இடமாற்றம் – டிஜிபி உத்தரவு!!
தமிழகத்தில்  தேர்தல் ஆணையத்தின் பரிந்துரையின் படி, 55 காவல் அதிகாரிகள் இடம் மாற்றப்பட்டுள்ளதாக டிஜிபி திரிபாதி உத்தரவிட்டுள்ளார்.

தமிழக தேர்தல்:

தமிழக சட்டமன்ற தேர்தல் வாக்குப்பதிவு வரும் ஏப்ரல் 6ம் தேதி அன்று நடக்க உள்ளது. தேர்தல் பற்றிய அறிவிப்பை தேர்தல் ஆணையம் வெளியிட்ட பின்னர் தமிழகத்தில் தேர்தலுக்கான முன்னேற்பாடு பணிகள் தொடங்கப்பட்டு விட்டது. அதற்கான அறிவிப்பு வெளிவந்த பின்னர் மாநிலத்தின் மொத்த பொறுப்பும் தேர்தல் ஆணையத்தின் வசம் ஒப்படைக்கப்பட்டு விடும்.

தேர்தல் ஆணையம்:

தேர்தல் ஆணையம் மாநிலத்தில் செய்யப்பட வேண்டிய அனைத்து முக்கிய முன்னேற்பாடுகளை மாநில அரசுக்கு அறிவுறுத்தும் உரிமை பெற்றுள்ளது. மாநில அரசுகள் தேர்தல் ஆணையத்தின் பரிந்துரையை ஏற்று அதன்படி செயல்பட வேண்டும். இந்நிலையில் தமிழக காவல் துறையில் அதிகாரிகளின் மாற்றங்களை தேர்தல் ஆணையம் தமிழக காவல் துறைக்கு அறிவுறுத்தியது.

காவல்துறையில் மாற்றம்:

தேர்தல் ஆணையம் பரிந்துரைத்ததன் பேரில், தமிழக காவல் துறை உள்ள 55 காவல் அதிகாரிகளை இடமாற்றம் செய்துள்ளதாக தமிழக டிஜிபி திரிபாதி அறிவித்துள்ளார். அதில் சென்னை, திருவண்ணாமலை, சேலம் மற்றும் சென்னை மத்திய குற்றப்பிரிவு உதவி ஆணையர் உட்பட மற்ற மாவட்டங்களின் உதவி ஆணையர்களை இடமாற்றம் செய்து டிஎஸ்பி உத்தரவிட்டுள்ளார். முன்னதாக தமிழகத்தில் 277 காவல் ஆய்வாளர்களை இடமாற்றம் செய்து திரிபாதி உத்தரவிட்டார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!