தமிழகத்தில் காவலர்களுக்கு வாரத்தில் ஒரு நாள் விடுப்பு – தமிழக டிஜிபி உத்தரவு!
தமிழகத்தில் காவலர்களுக்கு ஓய்வுக்காக வாரத்தில் ஒரு நாள் விடுமுறை மற்றும் பிறந்த நாள், திருமண நாள் போன்ற நாட்களிலும் குடும்பத்தினருடன் செலவிடுவதற்கு விடுமுறை அளிக்க வேண்டும் என்று டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவிட்டுள்ளார்.
அதிரடி அறிவிப்பு:
தமிழகத்தில் கடந்த ஆண்டு முதல் கொரோனா தொற்று பாதிப்புகள் காரணமாக முழு ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமலில் இருந்தது. இதனால் தமிழக காவல்துறையினர் தொடர்ந்து கண்காணிப்பு பணிகளில் ஈடுபட்டு வந்தனர். இதனால் அவர்களுக்கு வழக்கமாக அளிக்கப்பட்டு வந்த விடுமுறைகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டு அனைத்து நாட்களிலும் பணிக்கு வர உத்தரவிடப்பட்டது. அதனை தொடர்ந்து வந்த தேர்தல் பணிகள் மற்றும் கொரோனா 2ம் அலை ஊரடங்கு போன்ற காரணங்களினால் தொடர்ந்து ஓய்வின்றி பணியில் ஈடுபட்டு வந்தனர்.
தமிழக அரசு ஊழியர்களின் ஓய்வு வயது 58 ஆக குறைப்பு – பணபலன்களுக்கு பதில் பத்திரம்!
இந்நிலையில் தமிழகத்தில் புதிதாக பதவியேற்றுள்ள டிஜிபி சைலேந்திரபாபு அவர்கள் காவலர்களுக்கு விடுமுறை அளிப்பது குறித்த அதிரடி உத்தரவு ஒன்றை அனைத்து மாநகர காவல் ஆணையர்கள் மற்றும் காவல் கண்காணிப்பாளர்களுக்கும் பிறப்பித்துள்ளார். அதன்படி, காவலர்களின் உடல்நலன் மற்றும் குடும்பத்தினருடன் போதிய நேரம் செலவிட வாரம் ஒரு நாள் விடுப்பு தரப்பட வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.
TN Job “FB Group” Join Now
மேலும் காவலர்களின் பிறந்தநாள் மற்றும் திருமண நாட்களுக்கு விடுப்பு வழங்கப்பட வேண்டும், காவல்துறை சார்பில் பிறந்தநாள், திருமண நாள் வாழ்த்து சம்பந்தப்பட்ட காவலர்களுக்கு தெரிவிக்கப்பட வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார். தொடர்ந்து, வார ஓய்வு தேவைப்படாத காவலர்கள் பணியில் இருந்தால் மிகை நேர ஊதியம் வழங்கப்பட வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளார்.