ஊராட்சி மாணவர்களுக்கான தமிழக அரசின் அறிவிப்பு 2020
தமிழக ஊராட்சி பகுதிகளில் பயிலும் பள்ளி மாணவர்களுக்கு தற்போது அரசு தேர்வுகள் துறையிடம் இருந்து ஊரக திறனாய்வு தேர்வு குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. அது குறித்த தகவல்களை கீழே அறிந்து கொள்ளலாம்.
வேலைவாய்ப்பு செய்திகள்
ஊரக திறனாய்வு தேர்வு :
தமிழக அரசு தேர்வுகள் துறையின் மூலம் ஊரகப்பகுதி மாணவர்களுக்காக வருடந்தோறும் ஊரக திறனாய்வு தேர்வு நடத்தப்பட்டு வருகிறது. கிராம பஞ்சாயத்து மற்றும் டவுன்ஷிப் அரசு அங்கீகாரம் பெற்ற பள்ளிகளில் 2020-2021ம் கல்வி ஆண்டுகளில் 09ம் வகுப்பு பயிலும் மாணவ மாணவிகளுக்கு இத்தேர்வு நடத்தப்படுகிறது. நகராட்சி மற்றும் மாநகராட்சி மாணவர்களுக்கு அனுமதி இல்லை.
TN Police “FB Group” Join Now
ஊரக பகுதி மாணவர்களின் பெற்றோர்களின் ஆண்டு வருமானம் ஆனது ரூ.1 லட்சத்திற்கு மிகாமல் இருக்க வேண்டும். இந்த ஊரக திறனாய்வு தேர்வு வரும் 24.01.2021 அன்று நடத்தப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
விண்ணப்பிக்கும் முறை :
தகுதியுள்ள மாணவர்கள் 07.12.2020 முதல் 14.12.2020 வரை விண்ணப்பித்து கொள்ளலாம். அரசு தேர்வுகள் துறை இணையதளத்தில் வழங்கப்பட்டுள்ள விண்ணப்பங்களை பள்ளி தலைமையாசிரியர்கள் பதிவிறக்கம் செய்து மாணவர்களுக்கு வழங்கி அதனை பூர்த்தி செய்து, அதனுடன் வருவாய் சான்றிதழையும் சேர்த்து பெற்று கொள்ள வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
Official Notice
Official Site
TNEB Online Video Course
To Subscribe => Youtube Channel | கிளிக் செய்யவும் |
To Join => Whatsapp | கிளிக் செய்யவும் |
To Join => Facebook | கிளக் செய்யவும் |
To Join => Telegram Channel | கிளிக் செய்யவும் |
Thanks for sharing details of TRUST exam