தமிழகத்தில் இன்று 10 பேருக்கு கொரோனா பாதிப்பு – சிகிச்சையில் 41 பேர்!!
தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 10 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். தவிர, 41 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
கொரோனா பாதிப்பு
இந்தியாவில் கடந்த 2020 ஆம் ஆண்டு முதல் தாக்கத்தை ஏற்படுத்தி வரும் கொரோனா பெருந்தொற்று இன்றளவும் பாதிப்புகளை உருவாக்கி வருகிறது. பல்வேறு வகைகளாக உருமாறிய இந்த நோய்த்தொற்றால் லட்சக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டதுடன், ஆயிரக்கணக்கான மக்கள் உயிரிழந்தனர். இருப்பினும், தற்போது புதிய வகையாக உருமாறிய கொரோனா வைரஸ் பெருந்தொற்று தற்போது புதிய பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது. அதனால், வெளிநாடுகளில் இருந்து தாயகம் திரும்பும் பயணிகளுக்கு பரிசோதனைகள் மற்றும் கட்டுப்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
ஏர்டெல் வாடிக்கையாளர்கள் கவனத்திற்கு – ரீசார்ஜ் கட்டண உயர்வு அறிவிப்பு!!
Follow our Instagram for more Latest Updates
அந்த வகையில், தமிழகத்திலும் இந்த நோய்த்தொற்று காரணமாக தினசரி 8 முதல் 10 பேர் வரை பாதிக்கப்பட்டு வருகின்றனர். இது தொடர்பாக சுகாதாரத்துறை வெளியிட்ட தகவலின்படி, கடந்த 24 மணிநேரத்தில் சுமார் 10 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில் இன்று 5 பேர் நோய் பாதிப்பில் இருந்து குணமடைந்துள்ளனர். மேலும், நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டு 41 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக அறிக்கைகள் வெளியிடப்பட்டுள்ளது.