தமிழகத்தில் 100 ஐ தாண்டிய கொரோனா பாதிப்பு – சுகாதாரத்துறை தகவல்!!
தமிழகத்தில் கொரோனா புதிய பாதிப்புகளின் எண்ணிக்கை மீண்டும் 100 ஐ தாண்டி பதிவு செய்யப்பட்டுள்ளது. இதில், அதிகபட்சமாக சென்னையில் மட்டும் 28 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.
கொரோனா பாதிப்பு
நாடு முழுவதும் கொரோனா பரவல் பாதிப்புகள் மீண்டும் வேகமெடுத்து வருகிறது. அந்த வகையில், இந்தியாவில் கடந்த சில நாட்களாக 1000 ஐ தாண்டி கொரோனா புதிய பாதிப்புகள் பதிவு செய்யப்பட்டு வருகிறது. இதனை கருத்தில் கொண்ட மத்திய அரசாங்கம், முறையான நோய்த்தடுப்பு நடவடிக்கைகளை கையாள வேண்டும் என மாநில அரசுகளுக்கு வலியுறுத்திக் கொண்டிருக்கிறது. இதற்கிடையில், தமிழகத்திலும் கொரோனா புதிய பாதிப்புகளின் எண்ணிக்கை 3 இலக்கங்களைத் தாண்டியுள்ளது.
Follow our Instagram for more Latest Updates
சுமார் 9,000 பள்ளிகளில் ஸ்மார்ட் வகுப்புகள் – மத்திய அரசின் ‘PM-SHRI’ திட்டம்!!
அந்த வகையில், பல மாதங்களுக்கு பிறகு தமிழகத்தில் கொரோனா புதிய பாதிப்புகள் 100 ஐ கடந்துள்ளது. இது தொடர்பாக சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழகத்தில் கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் 102 பேர் கொரோனவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் அதிகபட்சமாக சென்னையில் 28 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதே போல, கோவையில் 14 பேர் மற்றும் செங்கல்பட்டில் 10 பேருக்கும் நோய்ப்பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும், 634 பேர் வீட்டுத் தனிமையில் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.