தமிழக அரசு நீதிமன்றங்களில் வேலைவாய்ப்பு – விண்ணப்பிக்க டிச.13 கடைசி நாள்!
தமிழகத்தில் மாவட்ட நீதிமன்றங்களில் அரசு வழக்கறிஞராக பணிபுரிய விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு விண்ணப்பிக்க வரும் டிச.13ம் தேதி கடைசி நாளாக மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.
அரசு பணியிடம்:
தமிழகத்தில் கொரோனா தொற்று குறைந்து வருவதை தொடர்ந்து பல்வேறு காலிப்பணியிட அறிவிப்புகள் வெளியிடப்பட்டு வருகிறது. அந்த வகையில் அரசு வழக்கறிஞர் பதவிக்கு தற்போது அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அதாவது சென்னை மாவட்ட கூடுதல் நீதிமன்றங்கள் மற்றும் சிட்டி சிவில் நீதிமன்றத்தில் பதவிக்கால முறையில் அரசு வழக்கறிஞராக பணிபுரிய விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.
சென்னையில் 23 நாட்கள் வெளுத்து வாங்கிய கனமழை – வெதர்மேன் ஷாக் ரிப்போர்ட்!
அரசு வழக்கறிஞராக பணியாற்ற விருப்பமும், தகுதியும் உள்ளவர்கள் இந்த பணிக்கு விண்ணப்பிக்கலாம். அவ்வாறு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் அதற்கான விண்ணப்பங்களை மாவட்ட நடுவர் மற்றும் சென்னை மாவட்ட ஆட்சியரின் www.chennai.nic.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் கீழ் வரும் முகவரியில் டிச.13ம் தேதி அன்று வரை பெறப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் வில்லங்க சான்று விபரங்களை திருத்த ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் – புதிய வசதி அறிமுகம்!
விண்ணப்பம் சமர்ப்பிக்க வேண்டிய முகவரி மாவட்ட நடுவர் மற்றும் சென்னை மாவட்ட ஆட்சியர், சிங்காரவேலர் மாளிகை, எண் – 62, ராஜாஜி சாலை, சென்னை 600-001 ஆகும். அரசு வேலை எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கும் வழக்கறிஞர்களுக்கு உதவும் வகையில் இத்தகைய வேலைவாய்ப்பு செய்தி சென்னை மாவட்ட நிர்வாகம் சார்பில் வெளியிடப்பட்டுள்ளது. எனவே அனைவரும் இந்த வாய்ப்பினை பயன்படுத்திக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.