தமிழகத்தில் 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி போட வாய்ப்பிலை – சென்னை ஆணையர் தகவல்!!!
தமிழகத்தில் போதுமான அளவு தடுப்பூசிகள் இல்லாத காரணத்தால் நாளை முதல் செயல்படுத்த இருந்த 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கான தடுப்பூசி திட்டம் செயல்படுத்த வாய்ப்பில்லை என்று சென்னை ஆணையர் செய்தியாளர்களிடம் கூறியுள்ளார்.
தடுப்பூசி திட்டம்:
நாடு முழுவதும் கொரோனா தொற்று பாதிப்பு அதிக வேகத்தில் பரவி வருகிறது. மத்திய அரசு நோய் தடுப்பு நடவடிக்கைகளை தீவிரமாக கடைபிடிக்க அனைத்து மாநில அரசுகளுக்கும் உத்தரவிட்டுள்ளது. இதனால் பல மாநிலங்களிலும் ஊரடங்கு அமலில் உள்ளது. மகாராஷ்டிரா, கேரளா, டெல்லி மற்றும் கர்நாடகா போன்ற மாநிலங்களில் பாதிப்பு எண்ணிக்கை வரலாறு காணாத அளவிற்கு உயர்ந்துள்ளது.
தமிழகத்தில் 108 ஆம்புலன்ஸ் சேவை அதிகரிப்பு – அழைப்பு எண் அறிமுகம்!!
தற்போதைக்கு தடுப்பூசி போடுவது மட்டும் தான் கொரோனா தொற்றை கட்டுப்படுத்த ஒரே வலி என்று சுகாதாரத்துறை மக்களை அறிவுறுத்தியுள்ளது. நாட்டில் கொரோனா தடுப்பூசி முன்னுரிமை அடிப்படையில் செலுத்தப்பட்டு வந்த நிலையில், பிரதமர் மோடி அவர்கள் கடந்த வாரம், வரும் மே 1ம் தேதி முதல் நாட்டில் உள்ள 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி செலுத்தப்படும் என்று அறிவித்தார்.
TN Job “FB Group” Join Now
இதனால் நாடு முழுவதும் உள்ள 18 வயதுக்கு மேற்பட்ட அனைவரும் 28 தேதி முதல் தடுப்பூசி போடுவதற்கு இணையத்தில் பதிவு செய்து வரும் நிலையில், தமிழகத்தில் நாளை இந்த திட்டம் செயல்படுத்த வாய்பில்லை என்று சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் செய்தியாளர்களிடம் கூறியுள்ளார். தமிழக சுகாதாரத்துறை செயலர் ராதா கிருஷ்ணன் அவர்களும் முன்னதாக இதே கருத்தை அறிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழகத்திற்கு 1.5 கோடி தடுப்பூசி தேவைப்படுவதாக ஆர்டர் கொடுக்கப்பட்டுள்ள நிலையில், தேவையான தடுப்பூசிகள் இன்னும் கிடைக்கவில்லை. இதனால் தான் நாளை தடுப்பூசி திட்டம் செயல்படுத்த முடியாத சூழல் வந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.