தமிழகத்தில் உயரும் கொரோனா புதிய பாதிப்புகள் – மீண்டும் ஊரடங்கு அமல்?

0
தமிழகத்தில் உயரும் கொரோனா புதிய பாதிப்புகள் - மீண்டும் ஊரடங்கு அமல்?
தமிழகத்தில் உயரும் கொரோனா புதிய பாதிப்புகள் - மீண்டும் ஊரடங்கு அமல்?
தமிழகத்தில் உயரும் கொரோனா புதிய பாதிப்புகள் – மீண்டும் ஊரடங்கு அமல்?

தமிழகத்தின் சில மாவட்டங்களில் மட்டும் கொரோனா 2 ஆம் அலை பாதிப்பு மீண்டுமாக உயர்ந்து வருவதால் நோய் பாதிப்பு அதிகம் கண்டறியப்படும் இடங்களில் கூடுதல் கட்டுப்பாடுகள் விதிக்கப்படலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளது.

ஊரடங்கு கட்டுப்பாடுகள்

என்னதான் நாடு முழுவதும் அல்லது தமிழகம் முழுவதும் கொரோனா 2 ஆம் அலை பாதிப்புகள் குறைந்துள்ளது என சொல்லிக்கொண்டிருந்தாலும், அங்கொன்றும் இங்கொன்றுமாக கொரோனா தொற்று பாதிப்பு பரவலாக காணப்பட்டு வருகிறது. ஒரு சில மாதங்களுக்கு முன்பு தமிழகத்தில் தினசரி 30 ஆயிரத்துக்கும் மேலாக பாதிப்புகளை ஏற்படுத்தி வந்த கொரோனா 2 ஆம் அலையினால், தற்போது 1,500 வரை மட்டுமே தினசரி பாதிப்புகள் பதிவு செய்யப்பட்டு வருகிறது.

பாகிஸ்தான் தொடரை ரத்து செய்த நியூசிலாந்து – கடைசி நிமிட முடிவால் ரசிகர்கள் அதிர்ச்சி!

இந்த எண்ணிக்கையானது இன்னும் வீழ்ச்சியடையும் என்று எதிர்பார்க்கப்பட்டு வரும் நிலையில், புதிய பாதிப்புகள் 1,700ஆக ஏற்றம் கண்டு வருகிறது. இதனால் கொரோனா மற்றும் ஊரடங்கு குறித்த அச்சம் மீண்டுமாக எழுந்துள்ளது. குறிப்பாக கோவை மாநகரத்தில் மீண்டுமாக கொரோனா பாதிப்புகள் விகிதம் அதிகரித்துள்ளது. அதனால் அப்பகுதிகளில் மட்டும் அரசு சில கூடுதல் கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. இது தவிர கொரோனா புதிய பாதிப்புகளின் அதிகரிப்புக்கு கோயில் திருவிழாக்கள் காரணமாக இருக்கலாம் என கூறப்பட்டு வருகிறது.

அதாவது தமிழகத்தில் ஊரடங்கு தளர்வுகளுக்கு பின்பாக, பெரிய கோவில்களில் கடுமையான கட்டுப்பாடுகள் கடைபிடிக்கப்பட்டு வருகின்ற போதிலும், சிறிய கோவில்களில் வழக்கம் போல சித்திரை மற்றும் ஆடி மாதங்களில் நடைபெறும் திருவிழாக்கள் கோலாகலமாக கொண்டாடப்பட்டுள்ளது. அதே நேரத்தில் 4 மாதங்களுக்கு பிறகு மீண்டுமாக திறக்கப்பட்ட பள்ளி, கல்லூரிகளிலும் மாணவர்களுக்கு நோய் தொற்று உறுதி செய்யப்பட்டு வருகிறது.

சென்னை துறைமுகத்தில் 8000 பேருக்கு வேலைவாய்ப்பு – மத்திய அமைச்சர் தகவல்!

இதற்கிடையில் 1 முதல் 8ம் வகுப்பு வரையுள்ள மாணவர்களுக்கு பள்ளிகளை திறப்பது குறித்தும் அரசு ஆலோசித்து வருகிறது. இந்நிலையில் தமிழகம் முழுவதும் கடந்த சில வாரங்களாக தான் மக்கள் தங்கள் இயல்பு வாழ்க்கையை நோக்கி சென்று கொண்டிருக்க கூடிய சூழலில் மீண்டும் பொது முடக்கம் அமல்படுத்துவதற்கு வாய்ப்பில்லை என அரசுத்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளது. என்றாலும் தொற்று அதிகம் உள்ள குறிப்பிட்ட மாவட்டங்களில் மட்டும் கூடுதல் கட்டுப்பாடுகள் விதிக்கப்படலாம் என கூறப்பட்டு வருகிறது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!