தமிழகத்தில் நவம்பர் 30 வரை ஊரடங்கு நீட்டிப்பு – முதல்வர் முக ஸ்டாலின் உத்தரவு!
தமிழகத்தில் கொரோனா நோய்த்தொற்று பரவல் படிப்படியாக குறைந்து வரும் நிலையில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு கட்டுப்பாடுகள் வருகிற நவம்பர் 30ம் தேதி வரை நீட்டிக்கப்படுவதாக முதல்வர் முக ஸ்டாலின் அவர்கள் உத்தரவு பிறப்பித்து உள்ளார்.
ஊரடங்கு நீட்டிப்பு:
தமிழகத்தில் கொரோனா 2வது அலையால் தினசரி தொற்று உறுதி செய்யப்படுவோர் எண்ணிக்கை அதிகரித்து கொண்டே சென்றது. இதனை கட்டுப்படுத்தும் நோக்கில் புதிதாக தலைமையேற்ற முதல்வர் முக ஸ்டாலின் அவர்களின் தலைமையிலான அரசு முழு ஊரடங்கு கட்டுப்பாடுகளை அமல்படுத்தியது. இரண்டு வார காலத்திற்கு எவ்வித தளர்வுகளும் இன்றி தீவிர கட்டுப்பாடுகள் அமலுக்கு வந்தன. இதன் விளைவாக கொரோனா தொற்று ஓரளவு கட்டுக்குள் வந்தது. எனவே ஊரடங்கில் படிப்படியாக தளர்வுகள் அளிக்கப்பட்டு மெல்ல இயல்பு நிலை திரும்பி உள்ளது.
நவ.19ம் தேதி (வெள்ளிக்கிழமை) அரசு பொது விடுமுறை அறிவிப்பு – மாநில முதல்வர் உத்தரவு!
அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி பள்ளிகள் அனைத்து வகுப்புகளுக்கும் நேரடி முறையில் பாடங்களை நடத்த தொடங்கி உள்ளன. கோவில்கள் திறப்பு, தியேட்டர்களில் 100 சதவீத பார்வையாளர்களுக்கு அனுமதி, சுற்றுலா தலங்கள் திறப்பு, ஹோட்டல்களில் அமர்ந்து உண்ண அனுமதி, முழு வீச்சில் பொது போக்குவரத்திற்கு அனுமதி என அனைத்து தளர்வுகளும் அமலில் உள்ளன. இதனால் தமிழகம் இயல்பு நிலையை நோக்கி திரும்பி உள்ளது. இருப்பினும் கொரோனா 3வது அலை அச்சம் நிலவுவதால் கொரோனா தடுப்பு வழிகாட்டுதல்களை முறையாக கடைபிடிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டு உள்ளது.
நவம்பர் 15 முதல் ஒரு வாரம் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்பு – முதல்வர் உத்தரவு!
அந்த வகையில் முகக்கவசம் அணிதல், தனிமனித இடைவெளி மற்றும் கிருமிநாசினி பயன்படுத்துதல் உள்ளிட்ட வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்ற வேண்டும் என அறிவுறுத்தப்பட்டு உள்ளது. இந்நிலையில் தமிழகத்தில் ஏற்கனவே அமலில் உள்ள தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு கட்டுப்பாடுகள் நவம்பர் 30ம் தேதி வரை நீட்டிக்கப்படுவதாக முதல்வர் முக ஸ்டாலின் அவர்கள் உத்தரவு பிறப்பித்து உள்ளார்.