தமிழகத்தில் மீண்டும் முழு ஊரடங்கு அமல்? மூன்றாவது அலை அச்சம்!
தமிழகத்தில் தொற்று அதிகரிக்கும் காரணத்தால் மீண்டும் முழு ஊரடங்கு விதிப்பதற்கு அதிக வாய்ப்புகள் உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
முழு ஊரடங்கு :
தமிழகத்தில் கொரோனா இரண்டாம் அலை கடந்த மாதம் முதல் மீண்டும் அதிகரித்து வருகிறது. இதனால் மாவட்ட நிர்வாகங்கள் கடும் கட்டுப்பாடுகளை விதித்து வருகின்றனர். முக்கிய வீதிகளிலும் மக்கள் அதிகம் கூடும் இடங்களிலும் நேர கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. கோவை, ஈரோடு, சென்னை, திருச்சி போன்ற மாவட்டங்களில் தொற்று தொடர்ந்து ஏறுமுகத்தில் உள்ளது. ஏற்கனவே கொரோனா மூன்றாம் அலை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில் தற்போது பாதிப்புகளும் அதிகரித்து வருவதால் இது மூன்றாம் அலையின் அறிகுறி என்று மருத்துவ வல்லுநர்கள் கூறுகின்றனர்.
தமிழக பட்டு விவசாயிகள் கவனத்திற்கு – சூப்பர் அறிவிப்பு!
இந்த நிலையில் தமிழகம் முழுவதும் மேற்று ஒரே நாளில் 1,592 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் மூன்றாம் அலை குழந்தைகளை அதிகம் தாக்கும் என்று எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. அதனால் குழந்தைகளுக்கு தடுப்பூசி பரிசோதனையில் மத்திய அரசு தீவிரம் காட்டி வருகிறது. இம்மாத இறுதியில் 18 வயதுக்கு கீழ் உள்ளவர்களுக்கு தடுப்பூசி பயன்பாட்டிற்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தமிழக பள்ளி ஆசிரியர்களுக்கு முக்கிய அறிவிப்பு – இன்று முதல் வகுப்புகள்!
கொரோனா மூன்றாம் அலை எச்சரிக்கை விடப்பட்ட காலமும் நெருக்கி விடுக்கப்பட்ட களமும் நெருங்கி விட்டது. இந்த நேரத்தில் தொற்று மீண்டும் தொற்று அதிகரிப்பதால் மீண்டும் தமிழகத்தில் முழு ஊரடங்கு அமல் படுத்துவதற்கான வாய்ப்புகள் அதிகமாக உள்ளது என்று தகவல் வெளியாகி உள்ளது. எனவே மக்கள் எச்சரிக்கை உடன் இருக்க வேண்டும். பள்ளிக்கு வரும் மாணவர்களுக்கு சளி இருமல் போன்ற கொரோனா அறிகுறிகள் இருந்தால் அவர்கள் பள்ளிக்கு வர வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.