தமிழக கூட்டுறவு வங்கி வேலைவாய்ப்பு 2020 – 201 பணியிடங்கள்
தமிழ்நாட்டில் உள்ள ஈரோடு , நீலகிரி, கரூர் ஆகிய மாவட்டங்களில் உள்ள கூட்டுறவு சங்கத்தில் காலியாக உள்ள எழுத்தர், உதவியாளர் மற்றும் மேற்பார்வையாளர் ஆகிய பணியிடங்களை நிரப்பும் பொருட்டு அதற்கான அதிகாரபூர்வ அறிவிப்பானது மார்ச் மாதம் வெளியானது. தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்கள் இந்த தமிழக அரசு பணிகளுக்கு விண்ணப்பிக்கலாம். இப்பணிடங்களுக்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க 31.05.2020 கடைசி நாள் ஆகும். எனவே விண்ணப்பதாரர்கள் தாமதிக்காமல் உடனே விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறது.
வேலைவாய்ப்பு செய்திகள்
வாரியத்தின் பெயர் | தமிழக கூட்டுறவு வங்கி |
பணிகள் | எழுத்தர், உதவியாளர் மற்றும் மேற்பார்வையாளர் |
மொத்த பணியிடங்கள் | 201 |
விண்ணப்பிக்கும் முறை | ஆன்லைன் |
விண்ணப்பிக்க கடைசி தேதி | 31.05.2020 |
காலிப்பணியிடங்கள்:
ஈரோடு , நீலகிரி, கரூர் ஆகிய மாவட்டங்களில் உள்ள கூட்டுறவு சங்கத்தில் 201 எழுத்தர், உதவியாளர் மற்றும் மேற்பார்வையாளர் ஆகிய பணியிடங்கள் காலியாக உள்ளன.
வயது வரம்பு :
விண்ணப்பதாரர்கள் வயதானது 18 முதல் 48 வரை இருக்கலாம். பணிக்கேற்ப தளர்வும் வயது வரம்பும் மாறுபடும்.
கல்வித்தகுதி :
விண்ணப்பதாரர்கள் ஏதேனும் ஒரு டிகிரி பட்டம் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும் கூட்டுறவு பயிற்சி முடித்திருக்க வேண்டும். பணியில் முன் அனுபவம் இருக்கலாம்.
ஊதிய விவரம் :
தேர்வு செய்யப்படுபவர்களுக்கு ஊதியமாக ரூ. 14500 /- முதல் ரூ. 47500 /- வரை வழங்கப்படும். பணிக்கேற்ப ஊதியம் மாறுபடும்.
தேர்வு செயல்முறை :
விண்ணப்பதாரர்கள் எழுத்துத்தேர்வு மற்றும் நேர்முகத்தேர்வு மூலம் தேர்வு செய்யப்படுவர். மேலும் அறிந்து கொள்ள அறிவிப்பினை அணுகவும்.
விண்ணப்பிக்கும் முறை :
தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் 31.05.2020 அன்றுக்குள் தங்களின் விண்ணப்பங்களை சமர்பிப்பதன் மூலம் விண்ணப்பித்து கொள்ளலாம்.
8th