தமிழகத்தில் கூட்டுறவு வங்கிகளில் நகைக்கடன் பெற்றோருக்கு ஹாப்பி நியூஸ் – தள்ளுபடி சான்றிதழ்!

0
தமிழகத்தில் கூட்டுறவு வங்கிகளில் நகைக்கடன் பெற்றோருக்கு ஹாப்பி நியூஸ் - தள்ளுபடி சான்றிதழ்!
தமிழகத்தில் கூட்டுறவு வங்கிகளில் நகைக்கடன் பெற்றோருக்கு ஹாப்பி நியூஸ் - தள்ளுபடி சான்றிதழ்!
தமிழகத்தில் கூட்டுறவு வங்கிகளில் நகைக்கடன் பெற்றோருக்கு ஹாப்பி நியூஸ் – தள்ளுபடி சான்றிதழ்!

தமிழகத்தில் கூட்டுறவு சங்கத்தில் 5 பவுன் அளவிலான நகைகளை அடகு வைத்து விவசாயிகள் வாங்கிய நகை கடன்களை, தள்ளுபடி செய்து தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டிருந்தார். இந்த உத்தரவு அடிப்படையில் தற்போது பயனாளிகளுக்கு நகைக்கடன் தள்ளுபடி செய்யப்பட்டதற்கான சான்றிதழ்களும் வழங்கப்பட்டு வருகிறது.

நகைக்கடன் தள்ளுபடி:

தமிழகத்தில் தற்போது ஆட்சி மாற்றத்திற்கு பிறகு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஏழை மக்கள் மற்றும் விவசாயிகள் பயன்பெறும் விதமாக சட்டசபையில் கூட்டுறவு சங்கங்களில், 5 பவுன் அளவிலான நகைகளை வைத்து நகைக்கடன் வாங்கியவர்களுக்கு, கடனை தள்ளுபடி செய்வதாக அறிவித்திருந்தார். நகைக்கடன் தள்ளுபடி குறித்து அதிகாரிகள் மூலம் கூட்டுறவு சங்கங்களில் நகைக்கடன் விவரங்கள் சேகரிக்கப்பட்டு, பல்வேறு நிபந்தனை அடிப்படையில் கூட்டுறவு சங்கங்களில் நகைக்கடன் தள்ளுபடி செய்யப்பட்டு வருகிறது.

IPL 2022: சென்னை சூப்பர் கிங்ஸ் ரசிகர்களுக்கு ஷாக் – தீபக் சாஹர் விலகல்?

அந்த வகையில் கோவை மாவட்டம், காரமடை ஊராட்சி ஒன்றியத்துக்குட்பட்ட, தோலம்பாளையம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கத்தில் 5 பவுன் அளவிலான நகைகளை அடகு வைத்திருந்த விவசாயிகளுக்கு கடன் தள்ளுபடிக்கான சான்றிதழ் வழங்கும் நிகழ்ச்சி நேற்று நடந்தது. இந்நிகழ்ச்சியில் மின்சாரத்துறை அமைச்சர் வி.செந்தில்பாலாஜி மற்றும் கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் பார்த்திபன், துணை பதிவாளர் கிருஷ்ணன், மத்திய கூட்டுறவு வங்கி நிர்வாக அலுவலர் பிராங்க்ளின் உட்பட அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர். இந்த நிலையில் சட்டப்பேரவைத் தலைவர் மு.அப்பாவு தலைமையில், பழவூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் நகைக்கடன் பெற்றவர்களில் 32 பயனாளிகள் தேர்வு செய்யப்பட்டு, அவர்களுக்கு நகைக்கடன் தள்ளுபடிக்கான சான்றிதழ் வழங்கப்பட்டது.

தமிழகத்தில் 9ம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு – ஊரக திறனாய்வுத் தேர்வு!

இதனை தொடர்ந்து கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் சட்டப்பேரவை தொகுதிக்கு உட்பட்ட அச்சமங்கலம் கிராமத்தில் பர்கூர் எம் எல் ஏ மதியழகன் தலைமை வகித்து, பாலிநாயனப்பள்ளி தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கத்தில் ரூ.6.10 லட்சம் மதிப்பிலான நகைக்கடன் பெற்ற 30 பயனாளிகளுக்கு, தள்ளுபடி சான்றிதழ்களை வழங்கி பேசினார். அப்போது அவர் தேர்தலின்போது அளித்த வாக்குறுதிகளை தமிழக முதலமைச்சர் நிறைவேற்றி வருகிறார் என்று கூறினார்.

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!