தமிழகத்தில் கல்லூரி திறப்பு ??? – அமைச்சர் அறிவிப்பு
தற்போது நாடு முழுவதும் கொரோனா வைரஸ் தாக்கம் இருப்பதனால் ஊரடங்கு அமலில் உள்ளது. இதன் காரணமாக அனைத்து நிறுவனங்களும் மூடப்பட்டுள்ளன. கல்வி நிறுவனங்களான பள்ளி, கல்லூரிகள் கூட மூடப்பட்டுள்ளது.
பள்ளிகளில் ஆண்டுத்தேர்வும் கல்லூரிகளில் செமஸ்டர் தேர்வுகளும் நடத்தப்படாமல் தள்ளிவைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் அடுத்த ஆண்டிற்கான கலந்தாய்வும் கேள்விக்குறியாகியுள்ளது.
இது குறித்து தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் அறிக்கை வெளியிட்டு உள்ளார். அதில் தமிழகத்தில் கொரோனா தொற்று முழுவதுமாக குணமடைந்த பின்னரே கல்லூரிகள் திறக்கப்படும் என அறிவித்து உள்ளார்.
தொற்றின் தாக்கம் முழுவதுமாக பின்னரே தேர்வுகளும் நடத்தப்படும் கலந்தாய்வும் மேற்கொள்ளப்படும் என அமைச்சர் தெரிவித்து உள்ளார். இதனால் இன்னும் கல்லூரி திறப்பு தாமதமாகும் என எதிர்பாக்கப்படுகிறது. கல்லூரிகள் திறந்தாள் சமூக இடைவெளியில் பாதிப்புகள் ஏற்படும் என கருதுவதால் தமிழக அரசு இந்த முடிவினை எடுத்து உள்ளது.
இப்படி தேர்வுகளே தள்ளிப்போவதால் அடுத்த கல்வியாண்டிற்கான சேர்க்கையும் தள்ளிபோகின்றது. இதனால் கல்வித்துறைக்கு பெரும் சவால் காத்து உள்ளது என்பதில் ஐயம் இல்லை
To Subscribe => Youtube Channel | கிளிக் செய்யவும் |
To Join => Whatsapp | கிளிக் செய்யவும் |
To Join => Facebook | கிளக் செய்யவும் |
To Join => Telegram Channel | கிளிக் செய்யவும் |