டிச.2ந்தேதி முதல் கல்லூரி வகுப்புகள் நடைபெறும் !!! – அரசு உத்தரவு
தமிழகத்தில் முதுநிலை இறுதியாண்டு பயிலும் மாணவர்களுக்கு வரும் டிச.2ந்தேதி முதல் பல்கலைக்கழக மற்றும் கல்லூரி வகுப்புகள் வழக்கம்போல் செயல்படும் என்று தமிழக அரசு தற்போது ஒரு செய்தி குறிப்பினை வெளியிட்டுள்ளது.
வேலைவாய்ப்பு செய்திகள்
கல்லூரி தேர்வு !
இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் பரவல் காரணமாக கடந்த மார்ச் மாதம் முதல் தற்போது வரை பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் மூடப்பட்டுள்ளது. இதனால் தேர்வுகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டு மாணவர்களுக்கு முந்தைய தேர்வுகள் அடிப்படையில் மதிப்பெண்கள் வழங்கப்பட்டது. ஆயினும் இறுதி ஆண்டு பயிலும் மாணவர்களுக்கு மட்டும் தேர்வுகள் ஆன்லைனில் நடத்தப்பட்டது. இன்னும் கல்லூரிகள் திறப்பிற்கு எந்த ஒரு அறிவிப்பும் வராத நிலையில் எப்போது அதற்கான அறிவிப்புகள் வெளியாகும் என மாணவர்கள் காத்திருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
கல்லூரிகள் திறப்பு
இந்நிலையில் நவம்பர் 16 முதல் பள்ளிகள் கல்லூரிகள் திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டதற்கு பெற்றோர்கள் தரப்பில் கடும் எதிர்ப்புகள் கிளம்பியது. இதனால் இந்த உத்தரவினை நிறுத்தி வைப்பதாக தமிழக அரசு மற்றோரு உத்தரவினை வெளியிட்டு உள்ளது. இருப்பினும், டிச.2ந்தேதி முதல் முதுநிலை இறுதியாண்டு அறிவியல், தொழில்நுட்ப மாணவர்களுக்காக கல்லூரி, பல்கலைக்கழகம் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அதாவது, அனைத்து ஆராய்ச்சி மாணவர்களுக்காகவும் டிச.2ந்தேதி கல்லூரி, பல்கலைக்கழங்கள் திறக்கப்படுகிறது. டிசம்பர் 2ந்தேதி திறக்கப்படும் கல்லூரிகளில் மட்டும் மாணவர்களுக்கான விடுதிகள் செயல்படும். இதர வகுப்பு மாணவர்களுக்கான கல்லூரி திறப்பு தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்பதாக ஒரு புதிய செய்தி குறிப்பினை வெளியிட்டு உள்ளது.
TNEB Online Video Course
To Subscribe => Youtube Channel | கிளிக் செய்யவும் |
To Join => Whatsapp | கிளிக் செய்யவும் |
To Join => Facebook | கிளக் செய்யவும் |
To Join => Telegram Channel | கிளிக் செய்யவும் |