தமிழக கல்லூரி மாணவர்களுக்கு ஹாப்பி நியூஸ் – போராட்ட வழக்குகள் ரத்து!
தமிழகத்தில் கொரோனா பரவல் குறைந்து கல்லூரிகள் திறக்கப்பட்ட நிலையில், ஆன்லைன் மூலமாக செமஸ்டர் தேர்வுகள் நடத்தக்கோரி மாணவர்கள் கடந்த மாதம் போராட்டம் நடத்தினர். தற்போது அது குறித்த புதிய உத்தரவை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.
மாணவர்கள் வழக்கு:
நாடு முழுவதும் கொரோனா பரவல் காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகளாக கடுமையான கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டது. தமிழகத்தில் பள்ளி மற்றும் கல்லூரிகள் திறக்கப்படாமல் ஆன்லைன் மூலமாக வகுப்புகள் நடத்தப்பட்டது. மேலும் பள்ளிகளில் பொதுத்தேர்வுகள் ரத்து செய்யப்பட்ட நிலையில், கல்லூரிகளில் ஆன்லைன் மூலமாக செமஸ்டர் தேர்வுகள் நடத்தப்பட்டது. அதன் பின் அரசின் துரித நடவடிக்கைகள் காரணமாக கொரோனா பரவல் கட்டுப்பாட்டிற்குள் வந்துள்ளது.
டிச.20 முதல் ஜன.7 வரை பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்பு – அரசு உத்தரவு!
அதனால் பள்ளி மற்றும் கல்லூரிகள் திறக்கப்பட்டு சுழற்சி முறையில் வகுப்புகள் நடைபெறும் என உத்தரவிடப்பட்டது. மேலும் செமஸ்டர் தேர்வுகள் நேரடியாக மட்டுமே நடைபெறும் என தெரிவிக்கப்பட்டது. அதற்கு பல கல்லூரி மாணவர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். மாணவர்கள் பல நகரங்களில் போராட்டத்தில் ஈடுபட்டனர். ஆன்லைன் மூலமாகவே பாடங்கள் நடத்தப்பட்டதால் பல பாடங்கள் இன்னும் நடத்தி முடிக்கவில்லை. அதனால் நேரடி தேர்வு எழுதுவதில் சிரமம் ஏற்படும் என தெரிவித்தனர்.
ஜனவரி 14 வரை முழு ஊரடங்கு நீட்டிப்பு – பிரதமர் திடீர் அறிவிப்பு!
அதனை தொடர்ந்து உயர்கல்வித்துறை நேரடி தேர்வுகள் ஜனவரி மாதத்திற்கு பின் நடத்தப்படும் எனவும், இந்த இரண்டு மாதங்களில் மாணவர்கள் பாடங்களை படிக்க பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என உத்தரவிட்டது. இந்நிலையில் போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் மீது வழக்கு தொடரப்பட்டது. மதுரையில் 9 வழக்குகள், கள்ளக்குறிச்சி மாவட்டம், சென்னை மற்றும் திருச்சியில் தலா ஒன்று என மொத்தம் 12 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. மாணவர்கள் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு அந்த வழக்குகள் அனைத்தையும் கைவிட முதலமைச்சர் மு.க ஸ்டாலின் உத்தரவிட்டார். அதன்படி அந்த 12 வழக்குகளிலும் தமிழ்நாடு காவல் துறையினரின் நடவடிக்கை கைவிடப்பட்டுள்ளது.