தமிழக கல்லூரிகள் திறப்பு: அமைச்சர் வெளியிட்ட அறிவிப்பு !
தமிழகத்தில் வரும் நவம்பர் 16ம் தேதி முதல் கல்லூரிகள் திறக்கப்படுமா? என்ற விவாதத்திற்கு தற்போது தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் அன்பழகன் ஒரு அறிவிப்பினை வெளியிட்டு உள்ளார்.
வேலைவாய்ப்பு செய்திகள்
பொது முடக்கம் !
இந்திய நாடு முழுவதும் கொரோனா வைரஸ் பரவல் காரணமாக கடந்த மார்ச் மாதம் முதல் பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் மூடப்பட்டது. தேர்வுகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டு மாணவர்களுக்கு முந்தைய தேர்வுகள் அடிப்படையில் மதிப்பெண்கள் வழங்கப்பட்டு தேர்ச்சி அறிவிக்கப்பட்டது. இறுதி ஆண்டு பயிலும் மாணவர்களுக்கு மட்டும் தேர்வுகள் ஆன்லைனில் நடத்தப்பட்டது. மேலும் அடுத்த கல்வி ஆண்டும் தற்போது வரை ஆன்லைன் வகுப்புகள் மூலமாகவே செயல்படுத்தப்பட்டு வருகிறது.
கல்லூரிகள் திறப்பு !
பல்வேறு கட்ட ஊரடங்கு தளர்வுகளை அறிவித்த மத்திய அரசு கல்லூரிகளை திறப்பது அந்தந்த மாநில தொற்றின் நிலையினை பொறுத்தது என்றும், அதனை அந்தந்த மாநில அரசுகள் முடிவு செய்து கொள்ளலாம் என்றும் உத்தரவிட்டு இருந்தது. ஆனாலும் தமிழகத்தில் மாணவர்களுக்கு இன்னும் கல்லூரிகளை திறப்பது குறித்து அறிவிக்கப்படவில்லை.
தமிழக கல்லூரிகள் பல கொரோனா சிகிச்சை மையங்களாக செயல்படுவதாலே இந்த தாமதம் ஏற்படுவதாக அரசு தரப்பில் கூறப்பட்டுள்ளது. முன்னதாக நவம்பர் 16ம் தேதி முதல் கல்லூரிகள் திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது. ஆனால் பெற்றோர்கள் இதற்கு எதிர்ப்பு தெரிவிப்பதாக தகவல்கள் வெளியாகிறது.
இதன் காரணமாக பெற்றோர்களிடம் கருத்து கேட்கப்பட இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகின்றன. இந்நிலையில் உயர் கல்வித்துறை அதிகாரிகளுடன் நவம்பர் 12ஆம் தேதி ஒரு ஆலோசனைக் கூட்டம் நடைபெறும் என்றும் அந்தக் கூட்டத்திற்குப் பிறகு கல்லூரிகளை நவம்பர் 16 ஆம் தேதி திறப்பது குறித்து முடிவு எடுக்கப்படும் என அமைச்சர் அன்பழகன் தெரிவித்துள்ளார்.
TNEB Online Video Course
To Subscribe => Youtube Channel | கிளிக் செய்யவும் |
To Join => Whatsapp | கிளிக் செய்யவும் |
To Join => Facebook | கிளக் செய்யவும் |
To Join => Telegram Channel | கிளிக் செய்யவும் |