கொரோனா தாக்கம் முழுமையாக குறையும் வரை ஆன்லைனிலேயே கல்லூரி வகுப்புகள் – அமைச்சர் அறிவிப்பு
தமிழகத்தில் கொரோனா வைரஸின் தாக்கம் முழுமையாக குறையும் வரை ஆன்லைனிலேயே தான் கல்லூரி வகுப்புகள் நடைபெறும் என தமிழக உயர்கல்வித் துறை அமைச்சர் அன்பழகன் அறிவித்து உள்ளார்.
வேலைவாய்ப்பு செய்திகள்
கொரோனா தாக்கம் :
தமிழகத்தில் கடந்த மார்ச் மாதம் முதல் கொரோனா தொற்றின் மூலமாக கல்லூரிகள் மூடப்பட்டு உள்ளது. இன்னும் கல்லூரிகள் திறக்கப்படாததால், மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்புகள் நடைபெற்று வருகிறது. மேலும் மாணவர்கள் கல்லூரி திறப்பினை எதிர்பார்த்து இருந்தாலும், தற்போது வரை அதற்கான எந்த ஒரு அறிவிப்பும் வெளியாகவில்லை. எனவே அடுத்த அறிவிப்பு வெளியாகும் வரை மாணவர்களுக்கு இந்த நிலை தான் நீடிக்கும் என தெரிகிறது.
அமைச்சர் அறிவிப்பு !
தற்போது செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் கொரோனா வைரஸின் தாக்கம் முழுமையாக குறையும் வரை ஆன்லைனிலேயே தான் கல்லூரி வகுப்புகள் நடைபெறும் என திட்டவட்டமாக அறிவித்து உள்ளார். மேலும் அரியர் தேர்வுகள் ரத்து செய்யப்பட்டது, அனைத்து பல்கலைக்கழகங்களிடமும் ஆலோசித்த பின் எடுத்த முடிவு தான் எனவும், ஆனால் தற்போது அதற்கான வழக்கு நிலுவையில் உள்ளதால் ஏதும் சொல்ல முடியாது எனவும் குறிப்பிட்டுள்ளார்.
TNEB Online Video Course
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்