தமிழகத்தில் மார்ச் 21 ஆம் தேதி கல்லூரி விடுமுறை – முக்கிய அறிவிப்பு!

0
தமிழகத்தில் மார்ச் 21 ஆம் தேதி கல்லூரி விடுமுறை - முக்கிய அறிவிப்பு!
தமிழகத்தில் மார்ச் 21 ஆம் தேதி கல்லூரி விடுமுறை - முக்கிய அறிவிப்பு!
தமிழகத்தில் மார்ச் 21 ஆம் தேதி கல்லூரி விடுமுறை – முக்கிய அறிவிப்பு!

தமிழகத்தில் சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே இருக்கும் பூலாங்குறிச்சி அரசுக் கல்லூரிக்கு வரும் 21-ம் தேதி விடுமுறை விடப்பட்டுள்ளதாக கல்லூரி முதல்வர் முத்துசாமி தெரிவித்துள்ளார். அதற்கான காரணம் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்

கல்லூரி விடுமுறை

சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூரில் இயங்கி வரும் வ.செ.சிவ. அரசுக் கல்லூரியில் மாணவர்கள் மத்தியில் மோதலை ஏற்படுத்தும் படி வணிக நிர்வாகவியல் துறை கவுரவ விரிவுரையாளர் செயல்பட்டு வருவதாகவும், அதனால் அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழ், வரலாறு துறையை சேர்ந்த மாணவர்கள் கல்லூரியில் கடந்த மார்ச் 16 ஆம் தேதி உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்நிலையில் இது குறித்து கல்லூரி முதல்வர் முத்துசாமி மாணவர்கள் மத்தியில் பேச்சுவார்த்தை நடத்தினார். அதன்படி மாணவர்களுக்கு உடன்பாடு இல்லாத நிலையில் போராட்டம் தொடர்ந்து வருகிறது. அதனால் பூலாங்குறிச்சி அரசுக் கல்லூரிக்கு வரும் 21ஆம் தேதி விடுமுறை என முதல்வர் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

Follow our Instagram for more Latest Updates

Exams Daily Mobile App Download

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!