தமிழக விவசாயிகளுக்கு வட்டியில்லா கடன் – ரூ.200 கோடி இலக்கு! மாவட்ட ஆட்சியர் அழைப்பு!
தமிழக அரசு வேளாண் தொழிலை ஊக்குவிக்கும் வகையிலும், விவசாயிகளுக்கு உதவும் வகையில் வட்டியில்லா பயிர்க்கடன் திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. இதன் மூலம் கடன் பெற்று பயனடையுமாறு அரசு அழைப்பு விடுத்துள்ளது. இந்த நிலையில் விருதுநகர் மாவட்ட ஆட்சித் தலைவர் பயிர் கடன் குறித்த முக்கிய தகவலை வெளியிட்டுள்ளார்.
பயிர் கடன்:
தமிழகத்தில் வேளாண் தொழிலுக்கு உதவும் வகையில் விவசாயிகளுக்கு தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்கள் வாயிலாக பயிர் கடன் வழங்கப்பட்டு வருகிறது. இதன் மூலம் ஏராளமான விவசாயிகள் பயனடைந்து வருகின்றனர். தற்போது மழை காலம் தொடங்கி விட்டதை அடுத்து விவசாயிகள் மழையை நம்பி விவசாயப் பணிகளை தொடங்கி விட்டனர். இந்த நிலையில் விவசாயிகள் அரசின் வட்டியில்லா பயிர் கடன்களை பெற்று பயனடையுமாறு அழைப்பு விடுத்து வருகிறது.
Telegram Updates for Latest Jobs & News – Join Now
அந்த வகையில் தற்போது விருதுநகர் மாவட்ட ஆட்சியர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களின் மூலம் நடப்பாண்டு ரூ.200 கோடி வரை கடன் வழங்க இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். அதனால் கடன் தேவையுள்ளவர்கள் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் நேரடியாக சென்று விண்ணப்பிக்கலாம். இதற்கு கிராம நிர்வாக அலுவலர் வழங்கும் பயிர் அடங்கல், ஆதார் அட்டை நகல், ரேஷன் கார்டு நகல், மற்றும் பாஸ்போர்ட் அளவு புகைப்படம் இரண்டு ஆகியவை தேவை என்று அறிவித்துள்ளார்.
தீபாவளிக்குப் பிறகு யாரெல்லாம் திருப்பதிக்கு போக போகிறங்க?? இதனை கட்டாயமாக தெரிஞ்சுக்கோங்க!!
Exams Daily Mobile App Download
மேற்சொன்ன ஆவணங்களை கொண்டு சென்று கடன் பெற விண்ணப்பித்து பயன்பெறுமாறு ஆட்சியர் தெரிவித்துள்ளார். மேலும் இதுவரை கடன் பெறாதவர்கள் உங்களது ஊரில் உள்ள தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் முதலில் புதிய உறுப்பினர்களாக சேர வேண்டும். இதற்கு ரூ. 100 கட்டணமாக செலுத்த வேண்டும்.
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்