தமிழக கூட்டுறவு வங்கிகளில் நகைக்கடன் தள்ளுபடி பெற தகுதியற்றோர் பட்டியல் – வெளியீடு!
தமிழகத்தில் கூட்டுறவு சங்ககளில் 5 பவுனுக்கு உட்பட்ட நகைக்கடன் தள்ளுபடி பெற தகுதி பெறாதோர் குறித்த பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. யார் யாருக்கு நகைக்கடன் இல்லை என்பது குறித்து இப்பதிவில் காண்போம்.
நகைக்கடன் தள்ளுபடி:
தமிழகத்தில் கடந்த ஏப்ரல் மாதம் நடைபெற்ற சட்டமன்ற தேர்தல் பிரச்சாரத்தில் மு க ஸ்டாலின் கூட்டுறவு வங்கிகளில் 5 சவரன் வரை வாங்கிய நகைக்கடன்கள் தள்ளுபடி செய்யப்படும் என்று வாக்குறுதி அளித்தார். அதன் பிறகு ஆட்சிக்கு வந்தவுடன் மருத்துவ கட்டமைப்பு பணிகள் போன்றவற்றால் அரசு கடும் பொருளாதார நெருக்கடியை சந்திதது. இந்த நிலையில் கூட்டுறவு சங்ககளில் கடன் பெற்ற அனைவரது கடன்களையும் தள்ளுபடி செய்ய முடிய நிலை ஏற்பட்டது. அதனால் அரசு தமிழகம் முழுவதும் கூட்டுறவு சங்ககளில் கடன் வாங்கியவர்களின் மொத்த விவரங்களையும் சேகரித்து அதற்கேற்றவாறு நிபந்தனைகளை விதித்து நகைக்கடனை தள்ளுபடி செய்ய முடிவு செய்தது.
தமிழக கூட்டுறவு வங்கிகளில் 5 சவரன் நகைக்கடன் தள்ளுபடி – தகுதி உடையோர் பட்டியல் வெளியீடு!
இதனையடுத்து கூட்டுறவு வங்கிகளில் நகைக்கடன் பெற்றவர்களில் 37 வகையான விவரங்களை சேகரிக்கும் பணிகளை கூட்டுறவுத்துறை அதிகாரிகள் மேற்கொண்டனர். விரைவில் கூட்டுறவு வங்கியில் நகைக்கடன் பெற தகுதியுள்ளவர் மற்றும் தகுதியற்றோர் விவரம் வெளியிடப்படும் என்று கூட்டுறவுத்துறை அமைச்சர் தெரிவித்தார். அதன்படி தற்போது கூட்டுறவு வங்கியில் நகைக்கடன் தள்ளுபடி பெற தகுதிபெறாத இனங்கள் குறித்த பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இது குறித்து அரசாணையும் வெளியிடப்பட்டுள்ளது.
தகுதி பெறாதவர்கள் பட்டியல்:
- நகைக்கடன் குறித்து அரசாணை வெளியிடப்பட்ட நாள் அன்றோ, அல்லது அதற்கு முன்னரோ கடன் தொகை முழுவதும் திரும்பச் செலுத்தப்பட்ட கடன்கள் தள்ளுபடி செய்யப்பட மாட்டாது.
- 31.03.2021 க்குப் பிறகு வழங்கப்பட்ட நகைக்கடன்கள் தள்ளுபடி செய்யப்பட மாட்டாது.
- 2021ஆம் ஆண்டில் பயிர்க் கடன் தள்ளுபடி பெற்றவர்கள் மற்றும் குடும்ப அட்டையில் உள்ள உறுப்பினர்கள்
பெற்ற நகைக்கடன்கள் தள்ளுபடி கிடையாது. - ரேஷன் கார்டு வைத்துள்ள குடும்ப அட்டைதாரர்கள் எந்த பொருளையும் ரேஷன் கடைகளில் வங்காதோர் மட்டும் அவரது குடும்ப உறுப்பினர் பெட்ரா கடன் தள்ளுபடி செய்யப்பட மாட்டாது.
TNPSC வெளியிட்ட முக்கிய அறிவிப்பு – உடனே பாருங்க!
- தமிழக அரசு ஊழியர்கள் மற்றும் அவர்தம் குடும்பத்தினர்கள் அரசுத் துறை நிறுவனங்களில் தற்காலிக அடிப்படையிலோ அல்லது தொகுப்பூதிய அடிப்படையிலோ பணியாற்றுபவர்கள் மற்றும் அரசு ஓய்வூதியதாரர்கள் ஆகியோரது கடன் தள்ளுபடி கிடையாது.
- கூட்டுறவு நிறுவனங்களில் பணிபுரியும் அலுவலர்கள் மற்றும் பிற பணியாளர்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தினர் பெற்ற நகைக்கடன்கள் தள்ளுபடி பெற தகுதியற்றவர்கள்
- தமிழ்நாட்டில் உள்ள ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட கூட்டுறவு நிறுவனங்களில் மேற்பட்ட நகைக்கடன்கள் 5 பவுனுக்கும் அதிகமாக தங்க நகை அடமானம் வைத்து பெறப்பட்ட நகைக்கடன்கள் தள்ளுபடி இல்லை.
- கூட்டுறவு சங்க அளவில் நகைக்கடன் வழங்க நிதியாதாரம் ஏதும் இல்லாமல் , மாவட்ட மத்தியக் கூட்டுறவு வங்கியில் இருந்து அனுமதிக்கப்பட்ட கடனிலிருந்து தொகை ஏதும் பெறப்படாமலும், நகையை மட்டும் பெற்றுக்கொண்டு பணம் ஏதும் பட்டுவாடா செய்யாமலும் உறுப்பினர்களும் சேமிப்புக் கணக்கில் வரவு வைத்து பணப்பட்டுவாடா செய்யாமல் வழங்கப்பட்ட நகைக்கடன்கள் தள்ளுபடி செய்யப்பட மாட்டாது.
- அந்தியோதயா அன்ன யோஜனா குடும்ப அட்டைதாரர்கள் ஒன்றோ அல்லது ஒன்றுக்கும் மேற்பட்ட கூட்டுறவு நிறுவனங்களில் ஒன்றோ அல்லது அதற்கு மேற்பட்ட நகைக்கடன்கள் மூலம் மொத்த நகை எடை 40 கிராமுக்கு கூடுதலாக நகைகளை வைத்து கடன் பெற்றவர்கள்.
- குடும்ப அட்டை எண்ணின் அடிப்படையில் ஒரே நபரோ அல்லது அவர்களின் குடும்ப உறுப்பினர்கள் பெற்ற கடன்கள் தள்ளுபடி கிடையாது.