தமிழகத்தில் 5 சவரன் நகைக்கடன் தள்ளுபடி கிடையாது? ஆய்வு குழு அமைப்பு! நடவடிக்கை தீவிரம்!
தமிழகத்தில் கூட்டுறவு வங்கிகளில் பொதுமக்கள் பெற்றுள்ள 5 சவரன் நகைக்கடன்களில் நடைபெற்றுள்ள முறைகேடுகள் குறித்து ஆய்வு செய்வதற்காக குழு அமைப்பு அரசு சார்பில் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதில் பொது நகைக்கடன்கள் குறித்தும் ஆய்வு செய்யப்பட உள்ளது.
நகைக்கடன் தள்ளுபடி:
தமிழகத்தில் முன்னர் ஆட்சியில் இருந்த முதல்வர் எடப்பாடி பழனிசாமி அவர்களின் தலைமையிலான அரசு கூட்டுறவு வங்கிகளில் 5 சவரன் பெற்றுள்ள நகைக்கடன் தள்ளுபடி செய்யப்படும் என அறிவித்தது. ஆனால் தேர்தலில் ஆட்சி மாற்றம் நடைபெற்று முதல்வராக முக ஸ்டாலின் அவர்கள் பொறுப்பேற்றார். இருப்பினும் தேர்தல் வாக்குறுதிகள் படி நகைக்கடன் உறுதியாக தடை செய்யப்படும் என முதல்வர் அறிவித்தார். ஆனால் தகுதியுடைய ஏழை, எளிய மக்களுக்கு மட்டுமே நகைக்கடன் தள்ளுபடி பொருந்தும் என தெரிவிக்கப்பட்டது. இதற்கான வழிகாட்டுதல்களும் விரைவில் வெளியாக உள்ளது.
ITBP படையில் 553 காலிப்பணியிடங்கள் – தேர்வு கிடையாது
இதனிடைய 5 சவரனுக்கு மேல் பெற்றுள்ள நகைக்கடன்களை விரைந்து வசூலிக்குமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. அதுமட்டுமின்றி சரியாக 5 சவரன் வரை உள்ள நகைக்கடன் மட்டுமே தள்ளுபடி செய்யப்படும் என கூறப்படுகிறது. இதனால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்து உள்ளனர். இதற்கிடையில் செய்தியாளர்களை சந்தித்த கூட்டுறவுத்துறை அமைச்சர் ஐ பெரியசாமி அவர்கள், நகைக்கடன் பெறுவதில் மிகப்பெரிய முறைகேடு நடைபெற்று உள்ளதாக தெரிவித்தார். பல்வேறு கூட்டுறவு வங்கிகளில் போலி நகைகளை வைத்து கடன்கள் பெறப்பட்டுள்ளது. இது தொடர்பாக தீவிரமாக விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
தமிழகத்தில் செப்.28 வரை இம்மாவட்டங்களில் கனமழை கொட்டித் தீர்க்கும் – வானிலை அறிக்கை!
இதனால் கடந்த அதிமுக ஆட்சியில் நடைபெற்ற முறைகேடுகள் வெளிச்சத்திற்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது தமிழக அரசு கூட்டுறவு வங்கிகளில் நடைபெற்ற நகைக்கடன் முறைகேட்டை ஆய்வு செய்ய குழு அமைத்து உத்தரவு பிறப்பித்து உள்ளது. மேலும் 5 சவரன் மட்டுமின்றி 100% பொது நகைக்கடன்களையும் ஆய்வு செய்ய வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.