தமிழக அரசு பொதுப்பணித்துறையின் பல்வேறு திட்டப்பணிகள் குறித்து முக ஸ்டாலின் ஆய்வு !!
தமிழகத்தில் அரசு பொதுப்பணித்துறையின் திட்ட பணிகள் குறித்து தமிழக முதல்வர் முக ஸ்டாலின் ஆய்வு மேற்கொண்டுள்ளார். இந்த ஆய்வு கூட்டத்தில் அமைச்சர் எ.வ.வேலு, தலைமை செயலாளர் வெ.இறையன்பு ஆகியோர் பங்கேற்றுள்ளனர்.
அரசு பொதுப்பணித்துறை :
பொதுப்பணித்துறை அரசின் முக்கிய துறைகளில் ஒன்றானதாகும். பொதுப்பணித் துறையானது நீர்வள ஆதாரத்துறை மற்றும் கட்டட அமைப்பு என்று இரு வகையாக உள்ளது அரசுத் துறை கட்டுமானங்கள், பொதுத்துறை நிறுவனங்களின் பெரும்பாலான கட்டிடங்கள் பராமரிப்பு, பாலங்கள், சாலைகள், மற்றும் உள்கட்டமைப்பு கட்டுமானங்களை இத்துறை நிர்வகிக்கிறது. தகுந்த தொழில்நுட்பங்களை பயன்படுத்தி கட்டிடங்களை கட்டித்தரும் தரமான நற்பணியை தொலைநோக்கு பார்வையுடன் இத்துறை செயலாற்றி வருகிறது.
நீலகிரி, கோவையில் தொடரும் கனமழை – வானிலை ஆய்வு மையம் அறிக்கை!!
அரசின் சார்பில் நினைவு சின்னங்கள் மற்றும் நினைவிடங்களை கட்டுதல் மற்றும் பராமரித்தல் போன்ற பணிகளையும் பொதுப்பணித்துறை மேற்கொள்கிறது. நீர்வழி பாதைகள் மற்றும் வடிகால் வசதிகளை பராமரித்து மேம்படுத்தல், நில நீரின் இருப்பு மற்றும் அதன் தரத்தை பரிசோதிப்பது போன்ற பணிகளை நீர்வள ஆதாரத்துறை மேற்கொள்கிறது. மேலும் நீர்வள பொது துறை பல்வேறு திட்டங்கள் மூலம் விவசாயிகளுக்கு நீர் கிடைக்க வழி செய்து வருகிறது. டெல்டா பகுதிகளில் விவசாய பகுதிகளால் நீர்ப்பாசன பணிகள், நிலங்களை தூர்வாரும் பணிகளையும் பொதுப்பணித்துறை திறம்படச் செய்து வருகிறது.
TN Job “FB Group” Join Now
பொதுப்பணி துறையின் கீழ் தகுதி பெற்ற பொறியாளர்கள் தமிழ்நாடு அரசு பணிகள் தேர்வாணையம் நடத்தும் தேர்வின் மூலம் தேர்வு செய்யப்பட்டு கட்ட அமைப்பில் புதுமையை புகுத்தி வருகின்றனர். நெடுஞ்சாலைகள் அமைத்தல், பாதைகளை இணைத்தல், பாலம் அமைத்தல் போன்ற பணிகளை தொழில்நுட்பத்தை கொண்டு பொதுப்பணி துறை விரைவாக முடித்து வருகின்றது. அதனை தொடர்ந்து அரசு பொதுப்பணித்துறையில் திட்ட பணிகள் குறித்து தமிழக முதல்வர் முக ஸ்டாலின் ஆய்வு மேற்கொண்டுள்ளார். இந்த ஆய்வு கூட்டத்தில் அமைச்சர் எ.வ.வேலு, தலைமை செயலாளர் வெ.இறையன்பு ஆகியோர் பங்கேற்றுள்ளனர்.