பாராலிம்பிக்ஸ் பேட்மிண்டன் போட்டியில் பதக்கம் வென்ற வீர்ரகளுக்கு வாழ்த்து – தமிழக முதல்வர் முக.ஸ்டாலின்!
பாராலிம்பிக்ஸ் பேட்மிண்டன் போட்டியில் தங்கம் மற்றும் வெண்கல பதக்கம் வென்ற இந்திய வீர்ரகளுக்கு தமிழக முதல்வர் முக ஸ்டாலின் தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.
வாழ்த்து:
ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் மாற்றுத்திறனாளிகளுக்கான 16 ஆவது பாராலிம்பிக் போட்டிகள் தற்போது நடைபெற்று வருகிறது. கடந்த 11 நாட்களாக நடைபெற்று வரும் போட்டிகளில் இந்திய அணியை சேர்ந்த வீரர்கள், வீராங்கனைகள் தங்களது முழு திறனையும் வெளிப்படுத்தி வருகின்றனர். நேற்று வரை இந்தியாவிற்கு மொத்தம் 15 பதக்கங்கள் கிடைத்திருந்தது. செப்டம்பர் 4ம் தேதி காலை நடந்த துப்பாக்கிச்சூடுதல் போட்டியில் இந்தியாவுக்கு 2 பதக்கங்கள் கிடைத்தது.
பயங்கரவாத அமைப்புகளுக்கு ஆப்கனில் இடமளிக்க கூடாது – இந்தியாவின் கோரிக்கை!
அதனை தொடர்ந்து மாலை நடைபெற்ற பேட்மிண்டன் போட்டியில் ஆண்களுக்கான பேட்மிண்டன் போட்டியில் பங்குபெற்ற இந்திய வீரர் பிரமோத் பகத் தங்க பதக்கம் வென்றார். இந்தியாவை சேர்ந்த மற்றொரு வீரர் மனோஜ் சர்கார் போட்டியில் வெண்கல பதக்கம் வென்றுள்ளார். இதன் மூலம் பாராலிம்பிக் போட்டிகளில் இந்தியாவுக்கு 17 பதக்கங்கள் கிடைத்துள்ளது. பாராலிம்பிக்ஸ் பேட்மிட்டன் போட்டியில் பதக்கம் வென்ற இந்திய வீர்ரகள் பிரமோத் பகத் மற்றும் மனோஜ் சர்கார் இருவருக்கும் தமிழக முதல்வர் தனது வாழ்த்துக்களை தெரிவித்து உள்ளார்.
TN Job “FB Group” Join Now
வாழ்த்து செய்தி குறிப்பில், பாராலிம்பிக்ஸ்ல் முதல் முறையாக சேர்க்கப்பட்ட பேட்மிண்டன் போட்டியில் இந்திய வீரர் பிரமோத் பகத் தங்கபதக்கத்தையும் மனோஜ் சர்க்கார் வெண்கல பதக்கத்தையும் வென்றிருப்பது மகிழ்ச்சி தரும் ஒன்றாகும். இந்த வரலாற்று சிறப்புமிக்க வெற்றிக்கு எனது பாராட்டுக்கள் மேலும்,அடுத்ததாக கலப்பு இரட்டையர் பிரிவில் வெண்கல பதக்கத்துக்கு விளையாட இருக்கும் பிரமோத் பகத் எனது வாழ்த்துகளையும் தெரிவித்து கொள்கிறேன் என்று கூறியுள்ளார்.