தமிழகத்தில் டாஸ்மாக் கடைகள் திறப்பு – முதல்வர் விளக்கம்!
இன்று மேட்டூர் அணை திறப்பு நிகழ்ச்சியில் பேசிய முதல்வர் முக ஸ்டாலின் அவர்கள் தமிழகத்தில் கொரோனா பரவல் குறைந்துள்ளது. எனவே அதன் தளர்வுகளில் ஒரு பகுதி தான் டாஸ்மாக் கடைகள் திறப்பு என விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
கொரோனா குறைவு:
தமிழகத்தில் கடந்த ஏப்ரல் மாதம் நடந்த சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்று திமுக தலைவர் முக ஸ்டாலின் முதல்வராக பதவியேற்றார். அவர் தலைமையில் உருவாகி உள்ள அரசு அனைத்து துறைகளிலும் பல மாற்றங்களை ஏற்படுத்தி வருகிறது. ஒவ்வொரு துறைகளிலும் புதுமைகளை உருவாக்க முயற்சித்து வருகிறது. முக ஸ்டாலின் ஆட்சி பொறுப்பேற்ற நாள் முதல் கொரோனா தடுப்பு பணிகளில் தீவிரமாக செயல்பட்டு வருகிறார்.
சபரிமலை ஐயப்பன் பக்தர்களுக்கு முக்கிய அறிவிப்பு – ஜூன் 14ம் தேதி நடைதிறப்பு!
மாவட்டம் தோறும் ஆய்வு பணிகளில் ஈடுபட்டு வருகிறார். மருத்துவர்கள் மற்றும் சுகாதாரத்துறை அதிகாரிகளுடன் கலந்தாலோசித்து முக்கிய முடிவுகளை எடுத்து கொரோனா தொற்றை ஒழிக்க நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். தற்போது கொரோனா குறைந்துள்ள பகுதிகளுக்கு மட்டும் சில தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளது. இன்று டெல்டா பகுதியின் நீர் பாசனத்திற்காக மேட்டூர் அணையை இன்று முதல்வர் திறந்து வைத்துள்ளார். கடந்த 16 வருடங்களாக குறிப்பிட்ட நாளான ஜூன் 12ம் தேதி மேட்டூர் அணை திறக்கப்பட்டு வருகிறது.
TN Job “FB Group” Join Now
அந்த நிகழ்ச்சியில் பேசிய முதல்வர் முக ஸ்டாலின் அவர்கள், மேட்டூர் அணையை ஆண்டுதோறும் ஜூன் 12ஆம் தேதி திறப்பதில் திமுக உறுதியாக உள்ளது. காவிரி டெல்டாவில் சாகுபடி பரப்பை ஒவ்வொரு ஆண்டும் அதிகரிப்பதே தமிழக அரசின் நோக்கம். மேலும் அனைவரின் முயற்சியாலும் தமிழகத்தில் கொரோனா பரவல் கட்டுக்குள் வந்துள்ளது. அதனால் ஊரடங்கில் தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளது. தளர்வுகளில் ஒரு பகுதி தான் டாஸ்மாக் கடைகள் திறப்பு என்று விளக்கம் அளித்துள்ளார்.