தமிழக அரசு கலைக்கல்லூரிகளில் முதுநிலை படிப்பு – ஆகஸ்ட் 23 முதல் விண்ணப்ப பதிவு!
தமிழகத்தில் உள்ள அரசு கலைக்கல்லூரிகளில் முதுநிலை படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கைக்கு ஆகஸ்ட் 23ம் தேதி முதல் விண்ணப்ப பதிவு தொடங்க உள்ளதாக கல்லூரி கல்வி இயக்ககம் சார்பில் அறிவிப்பு வெளியிடப்பட்டு உள்ளது.
மாணவர் சேர்க்கை:
தமிழகத்தில் கொரோனா நோய்த்தொற்று பரவலை தடுக்கும் நோக்கில் பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டு ஆன்லைன் வாயிலாக வகுப்புகள், தேர்வுகள் நடத்தப்பட்டு வருகின்றன. தற்போது தினசரி பாதிப்பு எண்ணிக்கை குறைந்து வரும் நிலையில் படிப்படியாக ஊரடங்கு தளர்வுகள் வழங்கப்பட்டு உள்ளது. தற்போது புதிய கல்வியாண்டு தொடங்கி உள்ள நிலையில் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை தொடங்கி உள்ளது. ஏற்கனவே இளங்கலை கலை, அறிவியல் படிப்புகளுக்கான ஆன்லைன் விண்ணப்ப பதிவு நிறைவடைந்துள்ளது.
தமிழகத்தில் செப்டம்பர் 6 வரை முழு ஊரடங்கு நீட்டிப்பு – திங்கள் முதல் தளர்வுகள் அமல்!
அதற்கான தரவரிசை பட்டியல் வெளியிடப்பட்டு ஆகஸ்ட் 23 முதல் மாணவர் சேர்க்கை தொடங்குகிறது. இந்த நிலையில் அரசு கலைக்கல்லூரிகளில் முதுநிலை படிப்புகளுக்கான ஆன்லைன் விண்ணப்ப பதிவு குறித்த அறிவிப்பை கல்லூரி கல்வி இயக்ககம் வெளியிட்டு உள்ளது. அதன்படி ஆகஸ்ட் 23 முதல் மாணவர்கள் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. செப்டம்பர் 1ம் தேதி வரை விண்ணப்பங்களை ஆன்லைனில் சமர்ப்பிக்கலாம். இதற்கிடையில் செப்.1 முதல் சுழற்சி முறையில் கல்லூரிகளை திறக்க அனுமதி வழங்கப்பட்டு உள்ளது குறிப்பிடத்தக்கது.
மெட்ராஸ் தினம் 2021 – இன்று முதல் கோலாகல கொண்டாட்டம்! வரலாற்று உண்மைகள்!
முதுநிலை படிப்புகளுக்கு விண்ணப்ப கட்டணமாக பொது மற்றும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் ரூ.58 மற்றும் பதிவு கட்டணமும் செலுத்த வேண்டும் என கல்லூரி கல்வி இயக்ககம் வெளியிட்ட அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.