தமிழக தலைமை செயலாளர் க.சண்முகம் ஜன.29 இல் ஓய்வு – புதிய அதிகாரி விரைவில் அறிவிப்பு!!
தமிழக அரசின் 46-வது தலைமை செயலாளர் க.சண்முகம் வருகிற ஜனவரி மாதம் 29 ஆம் தேதி ஓய்வு பெறுகிறார். அடுத்த தலைமை செயலாளர் குறித்த அறிவிப்பு ஓரிரு நாளில் வெளியிடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தலைமை செயலாளர் ஓய்வு:
தமிழக தலைமை செயலகத்தின் 42-வது தலைமை செயலாளர் க.சண்முகம் 2019-ஆம் ஆண்டு ஜூன் மாதம் 29 ஆம் தேதி நியமிக்கப்பட்டு, ஜூலை 1 ஆம் தேதி பதவியேற்றார். இந்நிலையில் அவரது பதவிக்காலம் கடந்த ஆண்டு ஜூலை மாதம் இறுதியில் முடிவடைந்தது. கொரோனா காரணமாக அவரது பதவிக்காலம் 3 மாதங்கள் நீடிக்கபட்டது. பிறகு மீண்டும் 3 மாதங்கள் நீடிக்கப்பட்டு ஜனவரி மாதம் 29-ஆம் தேதி வரை பொறுப்பு வகிப்பார் என்ற அறிவிப்பு வெளியிடப்பட்டது.
PSLV C-51 ராக்கெட் பிப்ரவரி மாதம் விண்ணில் பாயும் – இஸ்ரோ அறிவிப்பு!!
ஓய்வு பெறவுள்ள தலைமை செயலாளர் சண்முகம் சேலம் மாவட்டத்தில் பிறந்தவர். விவசாய குடும்பத்தை சேர்ந்த அவர் வேளாண் துறையில் முதுகலை பட்டம் பெற்றவர். 1985 ஆம் ஆண்டு ஜூன் 7 ஆம் தேதி இந்திய ஆட்சிப் பணியில் சேர்ந்தார். 2 முறை பணி நீட்டிப்பு வழங்கப்பட்டதை தொடர்ந்து மூன்றாவது முறை 6 மாத காலம் பணி நீட்டிப்பு வழங்க கோரிக்கை வைக்கப்பட்டது. ஆனால் அதுகுறித்து எந்த தகவலும் வெளியிடப்படாததால் புதிய தலைமை செயலாளர் குறித்த அறிவிப்பு ஓரிரு நாளில் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தமிழகத்தில் 9, 11ம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறப்பு – அமைச்சர் செங்கோட்டையன் விளக்கம்!!
இவர் ஏற்கனவே சிவகங்கை மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்களில் ஆட்சியராக பணியாற்றியுள்ளார். மேலும் உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறையில் முதன்மை செயலாளர் என பல முக்கிய பதவிகளை வகித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
Velaivaippu Seithigal 2021
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்