தமிழகத்தில் ஊரடங்கு கட்டுப்பாடுகள் அதிகரிப்பு – தலைமை செயலர் இன்று ஆலோசனை!!

0
தமிழகத்தில் ஊரடங்கு கட்டுப்பாடுகள் அதிகரிப்பு - தலைமை செயலர் இன்று ஆலோசனை!!
தமிழகத்தில் ஊரடங்கு கட்டுப்பாடுகள் அதிகரிப்பு - தலைமை செயலர் இன்று ஆலோசனை!!
தமிழகத்தில் ஊரடங்கு கட்டுப்பாடுகள் அதிகரிப்பு – தலைமை செயலர் இன்று ஆலோசனை!!

தமிழகம் முழுவதும் கொரோனா பரவல் அதிகரித்து வரும் சூழலில் தற்போதுள்ள கட்டுப்பாடுகளை மேலும் தீவிரப்படுத்த அனைத்து துறை அதிகாரிகளுடன் தலைமை செயலர் இன்று (16-04-2021) ஆலோசனை நடத்தவுள்ளார்.

கட்டுப்பாடுகள் அதிகரிப்பு:

கொரோனா வைரஸின் இரண்டாம் அலை எதிர்பாராத அளவுக்கு தினமும் புதிய உச்சத்தை எட்டி வருகிறது. நாடு முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை 2 லட்சத்தை தாண்டியுள்ளது. இந்த நோய் பரவலை கட்டுப்படுத்த முதல் கட்ட நடவடிக்கையாக மாநில அரசுகள் சில கட்டுப்பாடுகளை விதித்தது. இருந்தாலும் கொரோனா பரவல் சற்றும் குறையவில்லை. இதனால் இரண்டாம் கட்ட நடவடிக்கையாக பல மாநிலங்களில் இரவுநேர ஊரடங்கு அமல்படுத்தபட்டுள்ளது. சில மாநிலங்களில் மக்களின் அத்தியாவசிய தேவைகளுக்கு சிக்கல்கள் ஏற்படாதவாறு முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

TN Job “FB  Group” Join Now

தமிழகத்திலும் கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் சென்னை, காஞ்சீபுரம், திருவள்ளூர், கோவை, மதுரை, தஞ்சாவூர் ஆகிய மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. தமிழகம் முழுவதும் இதுவரை 50 ஆயிரம் பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சையில் உள்ளனர். பொதுமக்கள் முகக்கவசம் அணிய வேண்டும், சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும் என மாநில அரசு வலியுறுத்தி வருகிறது. மக்கள் அதிகம் கூடும் இடங்களில் கட்டுப்பாடுகள் அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழக அலுவலகங்களில் WORK FROM HOME முறை – சுகாதாரத்துறை செயலர் தகவல்!!

பொதுப் போக்குவரத்தை மக்கள் அதிகம் பயன்படுத்துவதால் கொரோனா எளிதாக பரவக்கூடும் என்ற அச்சம் மக்களிடையே எழுந்துள்ளது. தமிழகம் முழுவதும் சனி மற்றும் ஞாயிறு ஆகிய கிழமைகளில் முழு ஊரடங்கை அமல்படுத்த வேண்டும் என கோரிக்கைகள் எழுந்து வருகிறது. இந்நிலையில் தமிழக தலைமை செயலாளர் ராஜிவ் ரஞ்சன், கொரோனா தடுப்பு நடவடிக்கையாக தற்போதுள்ள கட்டுப்பாடுகளில் மேலும் சில கட்டுப்பாடுகளை தீவிரப்படுத்த அனைத்து துறை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்த உள்ளார். இன்று நடைபெறும் இந்த கூட்டத்தில் ஊரடங்கு குறித்தும், கட்டுப்பாடுகள் அதிகரிப்பது குறித்தும் ஆலோசனை மேற்கொள்ளப்படும் என தகவல்கள் கிடைத்துள்ளது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!