தமிழக கூட்டுறவு வங்கிகளில் நகைக்கடன் தள்ளுபடி யாருக்கு பொருந்தாது? அரசு விளக்கம்!
தமிழக கூட்டுறவு வங்கிகளில் ஒரே குடும்பத்தை சேர்ந்த ரேஷன் அட்டைதாரர்கள் நகைக்கடன் பெற்றிருந்தால், அவர்களுக்கு அரசு அறிவித்த 5 சவரன் நகைக்கடன் தள்ளுபடியில் இருந்து விலக்கு அளிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
நகைக்கடன் தள்ளுபடி
கடந்த மே மாதம் நடைபெற்ற தமிழக சட்டமன்ற தேர்தலில், திமுக தேர்தல் அறிக்கையில் கொடுக்கப்பட்ட கூட்டுறவு வங்கிகளில் பெற்ற 5 சவரன் நகைக்கடன் தள்ளுபடி குறித்த அறிவிப்புகள் விரைவில் நிறைவேற்றப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் தகுதியுடைய குடும்ப அட்டைதாரர்களுக்கு நகைக்கடன் தள்ளுபடி செய்யப்படும் என சட்டமன்ற பேரவையில் அரசு விளக்கம் கொடுத்திருந்தது. இதையடுத்து நகைக்கடன்களை தள்ளுபடி செய்யும் நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டு வருகிறது.
தமிழகத்தில் தொடக்க, நடுநிலை பள்ளிகள் திறப்பு – அமைச்சர் முக்கிய அறிவிப்பு!
அதில் நகைக்கடன் தள்ளுபடிக்காக பலர் புதிய ரேஷன் அட்டைகளுக்கு விண்ணப்பித்து வருவதும், கூட்டுறவு வங்கிகளில் ஏற்பட்ட சில முறைகேடுகள் குறித்தும் கண்டறியப்பட்டது. அதே போல ஒரே குடும்பத்தை சேர்ந்த பலரும், வெவ்வேறு கூட்டுறவு வங்கிகளில் நகைக்கடன் பெற்றுள்ள விவரம் தற்போது தெரியவந்துள்ளது. இதை தொடர்ந்து, முறையான விதிமுறைகளை மீறி பெறப்பட்டுள்ள நகைக்கடன் தொகையை வசூலிக்கவும் அரசு உத்தரவிட்டுள்ளது.
TNPSC குரூப் 2 & குரூப் 4 VAO தேர்வு தேதிகள் இன்று அறிவிப்பு? முக்கிய ஆலோசனை!
இந்நிலையில் ஒரே குடும்பத்தை சேர்ந்த ரேஷன் அட்டைதாரர்கள் பல்வேறு கூட்டுறவு வங்கிகளில் நகைக்கடன் பெற்றிருந்தால், அவர்களுக்கு கடன் தள்ளுபடி செய்யப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் விதிகளை மீறி, 5 சவரனுக்கும் அதிகமாக நகைக்கடன் பெற்றவர்களிடம் இருந்து அந்த கடன்களை வசூலிக்க, நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்றும், நகைக் கடன்களுக்கான தவணை செலுத்தாதவர்கள் மீது சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்கவும் அரசு உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பாக அனைத்து மண்டல பதிவாளர்களுக்கும் கூட்டுறவு சங்கம் சார்பில் சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது.