அரசு கல்லூரிகளில் 69 ஆயிரம் காலியிடங்கள் நிரம்பியது !!!!
தமிழகத்தில் உள்ள அரசு கலை அறிவியல் கல்லூரிகளில் காலியாக உள்ள இடங்களுக்கான இந்த கல்வி ஆண்டின் மாணவர் சேர்க்கை நடைபெற்று வரும் நிலையில், 69 ஆயிரத்திற்கும் மேற்பட்ட இடங்கள் நிரப்பப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தமிழகத்தில் கல்லூரி கல்வி இயக்குநரகத்தின் கீழ் செயல்படும் 190 அரசு கலை கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை ஆனது கடந்த ஆகஸ்ட் மாதம் 28 ஆம் தேதி முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. மொத்தமாக 90 ஆயிரம் காலியிடங்கள் மட்டுமே உள்ள நிலையில் 3.12 லட்சம் மாணவர்கள் விண்ணப்பித்து உள்ளனர்.
இதனால் கூடுதலாக 20% மாணவர் சேர்க்கைக்கு அரசிடம் அனுமதி பெறப்பட்டுள்ளது. ஆனால் ஒரு சில கல்லூரிகளில் குறைவாகவே மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன. இதனால் புதிய வழிமுறைகளை கடைபிடிக்க கல்லூரி கல்வி இயக்குனரகம் உத்தரவிட்டு இருந்தது.
இந்நிலையில் தற்போதைய நிலவரப்படி 69,600 மேற்பட்ட மாணவர்கள் சேர்க்கை பெற்றுள்ளதாக தகவல்கள் வெளியாகின்றன.
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்