ஆல்பாஸ் ஆன அரியர் மாணவர்களுக்கு புதிய சிக்கல் !!!!
தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்றின் பரவலால் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டு விட்டது. இதனால் மாணவர்களுக்கு தேர்வுகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டு தேர்ச்சி ஆனது வழங்கப்பட்டுள்ளது. அதாவது மாணவர்களுக்கு அக மதிப்பீடு மற்றும் முந்தைய செமஸ்டர் தேர்வுகளின் அடிப்படையில் மாணவர்களுக்கு மதிப்பெண் வழங்கப்பட்டு உள்ளது.
இருப்பினும் மாணவர்களுக்கு இறுதி ஆண்டு தேர்வு மட்டும் கண்டிப்பாக நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டு இருந்தது. இந்நிலையில் அரியர் தேர்வுகளுக்கு கட்டணம் செலுத்தி இருந்தாலும் அனைத்து தேர்வுகளிலும் இருந்து விலக்கு அளிக்கப்படும் என்று முதல்வர் சமீபத்தில் அறிவித்து இருந்தார். அதிலும் இறுதி ஆண்டு தேர்வு நடைபெறும்.
இந்த அறிவிப்பினால் மாணவர்கள் மகிழ்ச்சி அடைந்தனர். ஆனால் தற்போது புதிய சிக்கல் ஏற்பட்டுள்ளது. அதாவது பல மாணவர்களுக்கு அக மதிப்பெண்களின் மூலம் தேர்ச்சி வழங்க ஏற்பாடு செய்தாலும் தேர்ச்சி மதிப்பெண்கள் கிடைக்கவில்லை. யுஜிசி வழிகாட்டுதல் படி செய்தாலும் இதில் பெரும் சிக்கல்கள் ஏற்பட்டுள்ளது.
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்