தமிழகத்தில் அரியர் தேர்வுகள் ரத்து !!! – மாணவர்கள் மகிழ்ச்சி
தமிழகத்தில் பயிலும் கல்லூரி மாணவர்களுக்கான அரியர் தேர்வுகள் யாவும் ரத்து செய்யப்படுவதாக தமிழக முதல்வர் தற்போது அறிவித்து உள்ளார். இந்த அறிவிப்பினால் மாணவர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். அது குறித்த தகவல்களை கீழே வழங்கியுள்ளோம்.
தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவல் காரணமாக பள்ளிகள் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டு இருக்கிறது. இதனால் தேர்வுகள் யாவும் ரத்து செய்யப்பட்டு இருந்தது. கல்லூரியினை பொறுத்த வரை இறுதி செமஸ்டர் தேர்வுகளை தவிர மற்ற அனைத்து செமஸ்டர் தேர்வுகளும் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டு இருந்தது.
ஆனால் அரியர் தேர்வுகள் குறித்து எந்த அறிவிப்பு வெளியாகாமல் இருந்தது. தற்போது தமிழக முதல்வர் ஒரு அறிவிப்பினை வெளியிட்டு உள்ளார். இறுதி செமஸ்டர் தவிர மற்ற செமஸ்டர் அரியர் தேர்வுகளுக்கு விண்ணப்பக் கட்டணம் செலுத்தி இருந்தாலும் அவர்களுக்கு தேர்வில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டு உள்ளது. எனவே இந்த அறிவிப்பினால் மாணவர்கள் பெறும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்