தேர்வு எழுதாமலே தேர்ச்சி ! – கேள்விக்குறியாகும் கல்வி தரம்
தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்றின் காரணமாக அனைத்து கல்வி நிறுவனங்களும் மூடப்பட்டன. இதனால் மாணவர்களுக்கு தேர்வுகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டு தேர்ச்சி ஆனது ஆல்பாஸ் என வழங்கப்பட்டது. இதனால் மாணவர்கள் தரப்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது. மேலும் இறுதி ஆண்டு தேர்வுகளை தவிர அனைத்து பருவ அரியர் தேர்வுகளுக்கு கட்டணம் செலுத்தி இருந்தாலும் விலக்கு அளிக்கப்பட்டது. இந்த அறிவிப்பு மாணவர்கள் மத்தியில் பெரும் வரவேற்பையும், மகிழ்ச்சியினையும் ஏற்படுத்தி தந்துள்ளது.
இறுதி பருவ தேர்வுகளை ரத்து செய்ய நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. ஆனால் தேர்வுகளை தள்ளி நடத்தலாம் தவிர ரத்து செய்தல் கூடாது என்று அதிரடியாக அறிவித்து உள்ளது. இல்லையெனில் அந்த செய்யப்பட்டிருக்கும். இந்த அறிவிப்புகள் ஆதரவினை பெற்றதோடு பல்வேறு எதிர்ப்புகளையும் பெற்று உள்ளது.
அதாவது பல பாடங்களில் தோல்வி அடைத்தவரைகளையும் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கும் பொழுது அங்கு கல்வித்தரம் ஆனது கேள்விக்குறியாகி விட்டது. மாணவர்களின் மனா உளைச்சலை நீக்குவது முக்கியமானது என்றாலும் கல்வியின் தரத்தினை காப்பதும் கடமை. அரசியல் சாயம் பூசியதாக இருப்பதாக கல்வியாளர்கள் கருத்து தெரிவிக்கின்றனர். இனி வரும் நடைமுறைகளுக்கு மாறு வழியினை காண வேண்டியது அவசியம். இதே நிலையினை நீட்டித்தால் கல்வியின் தரம் சீர்குலைவதோடு பெறும் ஏற்றத் தாழ்வுகளை ஏற்படுத்தும் அபாயம் உள்ளது.
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்