இறுதியாண்டு செமஸ்டர் அரியர் பாடங்களுக்கு தேர்வு ரத்து ?!
இறுதியாண்டு செமஸ்டர் தேர்வு பாடங்களில் அரியர் வைத்தவர்களுக்கு மட்டும் ஆல்பாஸ் முறை ரத்து செய்வது குறித்து தமிழக உயர்கல்வி துறை ஆலோசித்து வருவதாக தற்போது தகவல்கள் வெளியாகின்றன.
கல்லூரிகள் தேர்வுகள் ரத்து !
கொரோனா தொற்றின் தாக்கத்தால் கல்லூரி தேர்வுகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டு மாணவர்களுக்கு தேர்ச்சி வழங்கப்பட்டது. மேலும் தொடர்ந்து தேர்வுகளை நடத்த முடியாத சூழல் காரணமாக அரியர் தேர்வுகளும் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டு இருந்தது.
வேலைவாய்ப்பு செய்திகள்
அரியர் தேர்வுகளுக் விண்ணப்பக் கட்டணம் செலுத்தியிருந்தாலும் தேர்வில் இருந்து விளக்கு அளிக்கப்படுவதாக அரசாணை வெளியிடப்பட்டது. இதனால் மாணவர்கள் தரப்பில் மகிழ்ச்சி தெரிவிக்கப்பட்டது இருப்பினும் இந்த அறிவிப்பிற்கு பல எதிர்ப்புகளும் வந்தன.
AICTE எதிர்ப்பு :
தமிழக அரசின் இந்த முடிவிற்கு அண்ணா பல்கலை மற்றும் அகில இந்திய தொழில்நுட்ப கல்வி கவுன்சில் போன்றவை ஆட்சேபம் தெரிவித்தன. ஆனால் யுஜிசி விதிமுறைப்படியே தேர்வுகள் ரத்து செய்யப்பட்டதாக தமிழக அரசு விளக்கம் அளித்துள்ளது. இதன் காரணமாக அரியர் தேர்ச்சி விவகாரத்தில் பெரும் குழப்பம் ஏற்பட்டது.
அரியர் தேர்ச்சி ரத்து ???
இதனால் இந்த அறிவிப்பினை சட்ட நிபுணர்கள் மற்றும் தேர்வு தர மதிப்பீடு அமைப்பின் விதிகள் ஆகியவற்றுடன் ஆலோசிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகின்றன. அப்படியானால் கலை, அறிவியல், பொறியியல் மற்றும் ஆர்கிடெக்சர் ஆகிய மாணவர்களுக்கு இறுதியாண்டு செமஸ்டர் தேர்வின் அரியர்களுக்கு மட்டும் தேர்ச்சி ரத்து செய்யப்படும். விரைவில் இது குறித்த அறிவிப்பு வருவதற்கு வாய்ப்புள்ளது.
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்