தமிழகத்தில் அக்னிவீரர் ஆட்சேர்ப்பு Rally 2022 – முழு விவரம் இதோ!
Agniveer technical, Agniveer Clerk, Store keeper technical, Agniveer general duty and Agniveer tradesmen ஆகிய பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை இந்திய ராணுவம் தற்போது வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்பின் படி, தமிழகம் முழுவதும் உள்ள விண்ணப்பதாரர்களை தேர்வு செய்ய இந்திய ராணுவம் அக்னிவீர் ஆட்சேர்ப்பு பேரணியை நடத்த உள்ளது.
திருச்சி Rally நவம்பர் 13:
திருச்சி, கரூர், பெரம்பலூர், அரியலூர், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம், விருதுநகர், திருநெல்வேலி, தென்காசி, துாத்துகாசி ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த விண்ணப்பதாரர்களுக்கு, திண்டுக்கல் சாலையில் உள்ள தேசியக் கல்லூரியில் நவம்பர் 13-ஆம் தேதி பேரணி (rally) நடைபெற உள்ளது. கன்னியாகுமரி மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் உள்ள காரைக்கால் மாவட்டத்தினரும் இதில் பங்கேற்கலாம். அவர்கள் தேவையான கல்விச் சான்றிதழ்களுடன் அதிகாலை 4 மணிக்கு முன்னதாக நிகழ்விடத்திற்கு வர வேண்டும் என்று மாவட்ட நிர்வாகத்தின் செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Exams Daily Mobile App Download
வேலூர் நவம்பர் 15-19 Rally:
அக்னிவீர் (ஆண்கள்), அக்னிவீர் (பெண்கள் ராணுவ போலீஸ்), சிப்பாய் தொழில்நுட்ப செவிலியர் உதவியாளர் / செவிலியர் உதவியாளர் (கால்நடை மருத்துவம்) மற்றும் ஜூனியர் கமிஷன் அதிகாரி (மதம்) ஆகிய பணிகளுக்கு பணியாளர்களை தேர்வு செய்வதற்கான மற்றொரு ஆள்சேர்ப்பு பேரணி நவம்பர் 15 முதல் 29 வரை வேலூரில் உள்ள மாவட்ட விளையாட்டு வளாகத்தில் நடைபெற உள்ளது. இந்த பேரணியில் தமிழ்நாடு, ஆந்திரா மற்றும் தெலுங்கானாவில் இருந்து பதிவு செய்யப்பட்ட தேர்வர்கள் பங்கேற்கலாம். விண்ணப்பதாரர்கள் wwwioinindianarmy.nic.in இல் பதிவேற்றிய படி அந்தந்த பேரணி அறிவிப்பில் பட்டியலிடப்பட்டுள்ள அனைத்து ஆவணங்களையும் கொண்டு வருவது கட்டாயமாகும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.