தமிழகத்தில் பிளஸ் 2 பொதுத்தேர்வு ரத்து? முதல்வர் முக்கிய ஆலோசனை!!
தமிழகத்தில் கொரோனா நோய்பரவல் காரணமாக பிளஸ் 2 மாணவர்களுக்கான பொதுத்தேர்வு ஒத்திவைக்கப்பட்டுள்ள நிலையில், அதனை ரத்து செய்வது குறித்து இன்று தமிழக முதல்வர் ஸ்டாலின் அவர்கள் முக்கிய ஆலோசனை மேற்கொள்ளவுள்ளார்.
பிளஸ் 2 பொதுத்தேர்வு:
தமிழகத்தில் 2020-21ம் கல்வியாண்டிற்கான பிளஸ் 2 பொதுத்தேர்வு கொரோனாவின் இரண்டாம் அலையின் தீவிரம் காரணமாக தேதி அறிவிக்காமல் ஒத்திவைக்கப்பட்டது. அதன் பின்பு தற்போது வரை இது குறித்த முறையான அறிவிப்பு வெளிவரவில்லை. தற்போது பிளஸ் 2 மாணவர்களுக்கு வாட்ஸ் ஆப் மூலம் திருப்புதல் தேர்வு நடைபெற்று வருகிறது. இதனை தொடர்ந்து பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அவர்கள் நேற்று (ஜூன் 1) முதல்வர் அவர்களுடன் இது குறித்து ஆலோசனை மேற்கொண்டார்.
பிற்பகல் 2 மணிவரை கடைகளை திறக்க அனுமதி – ஜூன் 10 வரை முழு ஊரடங்கு நீட்டிப்பு!!
ஆலோசனைக்கு பின்பு பேட்டியளித்த அமைச்சர் அன்பில் மகேஷ் அவர்கள் கூறியதாவது, சிபிஎஸ்இ 12ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவினை பொறுத்து, தமிழகத்தில் 12ம் வகுப்பிற்கு தேர்வு நடத்துவது குறித்து முடிவெடுக்கப்படும் என்று தெரிவித்தார். இதனை தொடர்ந்து மத்திய கல்வி உயர் அதிகாரிகளுடன் பிரதமர் மோடி அவர்கள் ஆலோசனை மேற்கொண்டு சிபிஎஸ்இ பிளஸ் 2 பொதுத்தேர்வு கொரோனா நோய்பரவல் காரணமாக ரத்து செய்யப்படுவதாக அறிவித்தார். இந்த அறிவிப்பு அனைவராலும் வரவேற்கப்பட்டது.
TN Job “FB Group” Join Now
இந்நிலையில் இன்று மீண்டும் தமிழக முதல்வர் ஸ்டாலின் அவர்களின் தலைமையில் பிளஸ் 2 பொதுத்தேர்வு குறித்து முக்கிய ஆலோசனை நடக்கவுள்ளது. இந்த கூட்டத்தில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, செயலாளர் காகர்லா உஷா, ஆணையர் நந்தகுமார் உள்ளிட்டோர் கலந்து கொள்வர் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சிபிஎஸ்இ பிளஸ் 2 பொதுத்தேர்வு ரத்து செய்யப்பட்டதை தொடர்ந்து தற்போது இந்த ஆலோசனை நடைபெறவுள்ளதால் இந்த கூட்டம் மிக முக்கியமானதாக கருதப்படுகிறது. இதனால் தமிழகத்திலும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து செய்யப்பட்ட அறிவிப்பு விரைவில் வெளியாகும் என தகவல்கள் தெரிவிக்கின்றது.