தமிழகத்தில் பிளஸ் 2 பொதுத்தேர்வு – முதல்வருடன் ஆலோசனை!!
தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக ஒத்திவைக்கப்பட்ட பிளஸ் 2 பொதுத்தேர்வு எப்போது நடத்துவது என்பது குறித்து தமிழக முதல்வர் ஸ்டாலின் அவர்களுடன் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யா மொழி அவர்கள் தற்போது ஆலோசனை மேற்கொண்டு வருகிறார்.
பிளஸ் 2 பொதுத்தேர்வு:
தமிழகத்தில் இந்த ஆண்டு தொடக்கத்தில் திறக்கப்பட்ட உயர்கல்வி பள்ளி வகுப்புகள் கொரோனாவின் இரண்டாவது அலை காரணமாக மீண்டும் மூடப்பட்டது. மேலும் 10 மற்றும் 11ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் ரத்து செய்ப்பட்டு மாணவர்கள் அனைவரும் தேர்வின்றி தேர்ச்சி பெறுவார்கள் என்று அறிவிக்கப்பட்டது. ஆனால் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு திட்டமிட்டபடி மே 5ம் தேதி முதல் நடத்தப்படும் என்று தமிழக அரசு அறிவித்தது. ஆனால் இதற்கு மத்தியில் கொரோனா தொற்று தீவிரமடைந்தது.
CBSE 12ம் வகுப்பு பொதுத்தேர்வு குறித்த முக்கிய அறிவிப்பு – இன்று வெளியீடு!!
இதன் காரணமாக தேதி அறிவிக்காமல் பிளஸ் 2 பொதுத்தேர்வினை தமிழக அரசு ஒத்திவைத்தது. மேலும் தமிழகத்தில் தற்போது கடுமையான ஊரடங்கு நடவடிக்கை அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் பிளஸ் 2 பொதுத்தேர்வு குறித்த முறையான அறிவிப்பு எதுவும் வெளிவராததால் பெற்றோர்கள் மற்றும் மாணவர்கள் கேள்விகள் எழுப்பி வருகின்றனர். ஆனால் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அவர்கள் தமிழகத்தில் கட்டாயமாக பொதுத்தேர்வு நடத்தப்படும் என்றும் தேர்வுகள் ஆன்லைன் மூலம் நடத்தப்பட மாட்டாது என்றும் தெரிவித்தார்.
TN Job “FB Group” Join Now
இந்நிலையில் பிளஸ் 2 மாணாக்கர்களுக்கு வாட்ஸ் ஆப் மூலம் திருப்புதல் தேர்வுகள் நடைபெற்று வருகிறது. இதனை தொடர்ந்து தமிழகத்தில் பிளஸ் 2 பொதுத்தேர்வு எப்போது நடத்துவது என்பது குறித்து பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யா மொழி அவர்கள் தமிழக முதல்வர் ஸ்டாலின் அவர்களுடன் ஆலோசனை மேற்கொண்டு வருகிறார். இந்த ஆலோசனை கூட்டத்தில் பள்ளிக்கல்வித்துறை செயலாளர் காகர்லா உஷா, ஆணையர் நந்தகுமார் உள்ளிட்டோரும் கலந்து கொண்டுள்ளனர். இதற்கான முக்கிய அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.