தமிழகத்தில் பிளஸ் 2 மாணவர்களுக்கு தேர்வின்றி தேர்ச்சி – அரசுக்கு கோரிக்கை!
தமிழகத்தில் பிளஸ் 2 மாணவர்கள் தேர்ச்சி மதிப்பெண்கள் மட்டும் தங்களுக்கு போதும் என்று கருதினால் அவர்களுக்கு தேர்வில் இருந்து விலக்கு அளிக்கலாம் என்று ஆசிரியர் சங்கத்தினர் வலியுறுத்தி வருகின்றனர்.
பிளஸ் 2 பொதுத்தேர்வு:
தமிழகத்தில் பிளஸ் 2 பொதுத்தேர்வு எப்போது நடைபெறும் என்று மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் மத்தியில் தொடந்து குழப்பம் ஏற்பட்டு வருகிறது. இந்நிலையில் இது குறித்த முக்கிய அறிவிப்பு இன்னும் சில தினங்களில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் அதிக மதிப்பெண்கள் பெற வேண்டும் என்று விரும்புபவர்களுக்கு மட்டும் தேர்வு நடத்தப்படலாம் என்று கூறப்பட்டு வருகிறது. இந்நிலையில் தற்போது இது குறித்து ஆசிரியர் சங்கம் கோரிக்கை ஒன்றை விடுத்துள்ளனர்.
தமிழகத்தில் பேருந்து போக்குவரத்துக்கு அனுமதி? அதிகாரிகள் விளக்கம்!
அவர்கள் கூறியதாவது, மாணவர்களின் பிளஸ் 2 மதிப்பெண் அவர்களின் கல்லூரி சேர்க்கைக்கு உதவும். தேர்ச்சி மதிப்பெண் மட்டும் போதும் என்று கூறும் மாணவர்களுக்கு தேர்வில் இருந்து விலக்கு அளிக்கலாம் என்று கூறப்படுகிறது. மேலும் மாணவர்கள் அதிக மதிப்பெண்கள் வேண்டும் என்று விரும்பினால் அவர்களுக்கு தேர்வு நடத்தப்படலாம் என்றும், தேர்வு எழுத விரும்பும் மாணவர்களுக்கு சுகாதாரத்துறை அனுமதியுடன் தேர்வு நடத்த வேண்டும் என்று தெரிவித்தனர்.
TN Job “FB Group” Join Now
சூழ்நிலைகளுக்கேற்ப மொழிப்பாடங்களை தவிர்த்து முக்கிய 4 பாடங்களுக்கு மட்டும் தேர்வுகள் நடத்த வேண்டும் என்றும் மொழி பாடங்களுக்கு 11ம் வகுப்பு மதிப்பெண் அல்லது பள்ளி அளவில் நடத்தப்பட்ட தேர்வுகளின் மதிப்பெண் போன்றவற்றை வழங்கலாம் என்றும் தெரிவித்தனர். அதேபோல் இந்த தேர்விற்கு நேரம் 1.30 மணி நேரமாக குறைக்கப்பட்டு ஒவ்வொரு பாடங்களுக்கும் 5 முதல் 10 வினாத்தாள்களை தயாரித்து 80 சதவிகித வினாக்கள் அதிலிருந்து எடுக்க வேண்டும் என்றும் மீதமுள்ள 20 சதவிகித வினாக்கள் பாட இறுதியில் இருந்து கேட்கலாம் என்றும் தெரிவித்தனர். மேலும் மாணவர்கள் பயிலும் பள்ளிகளிலே தேர்வு மையம் அமைக்க வேண்டும் அல்லது மாணவர்களின் வீடுகளுக்கு அருகே உள்ள பள்ளிகள் தேர்வு மையமாக அறிவிக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளனர்.