12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாவது எப்போது ????
நாடு முழுவதும் கொரோனா வைரஸ் தொற்று காரணமாக முழு ஊரடங்கானது அமல்படுத்தப்பட்டது. இதனால் அனைத்து நிறுவனங்களும் மூடப்பட்டிருந்தது. மாணவர்களின் நலன் கருதி பள்ளி மற்றும் கல்லூரிகள் என அனைத்து கல்வி நிறுவனங்களும் மூடப்பட்டிருந்தது.
ஆனால் தமிழகத்தில் ஊரடங்கிற்கு முன்னரே 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத் தேர்வுகள் நடந்து முடிந்து விட்டது. ஆனால் அதன் பிறகு விடைத்தாள் திருத்தும் பணி தொடங்குவதில் தான் தாமதம் ஏற்பட்டது. எனினும் அதன் பிறகு ஊரடங்கிற்கு மத்தியிலும் பலத்த பாதுகாப்புடன் விடைத்தாள் திருத்தும் பணி கடந்த 4 வாரங்களாக நடைபெற்று தற்போது முடிவடைந்து உள்ளது.
ஆனாலும் தேர்வு முடிவுகள் வெளியாவதில் தாமதம் ஏற்படும் என எதிர்பாக்கப்படுகிறது. ஏனெனில் கடைசி தேர்வினை அதிக அளவு மாணவர்கள் எழுத முடியாததினால் அவர்களுக்கு என மீண்டும் தேர்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அனால் தமிழகத்தில் தற்போது அனைத்து பொதுத்தேர்வுகளும் ரத்து செய்யப்பட்டுள்ளதால் அவர்களுக்கும் காலாண்டு அரையாண்டு மதிப்பெண்களை பொறுத்து மதிப்பெண்கள் வழங்கப்பட வேண்டும். அதன் பின்னரே முடிவுகள் வெளியாகும்.
தேர்வு முடிவுகள் இந்த மாத இறுதிக்குள் வெளியாக வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகின்றன.
To Subscribe => Youtube Channel | கிளிக் செய்யவும் |
To Join => Whatsapp | கிளிக் செய்யவும் |
To Join => Facebook | கிளக் செய்யவும் |
To Join => Telegram Channel | கிளிக் செய்யவும் |