தமிழக பொதுத்தேர்வு மாணவர்கள் கவனத்திற்கு – பிப். 10ம் தேதி வரை சிறப்பு அனுமதி!
தமிழகத்தில் நடப்பு கல்வியாண்டில் பொதுத்தேர்வு எழுத இருக்கும் பள்ளி மாணவர்கள் தங்களது விவரங்களை பிப்ரவரி 10ம் தேதி வரை இணையதளத்தில் மாற்றம் செய்து கொள்ள அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
பொதுத்தேர்வு:
தமிழகத்தில் கடந்த இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு நடப்பு கல்வி ஆண்டில் தான் 10, 11 ஆம் வகுப்பு மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்கள் முழுமையான பாடத்திட்டத்தின் படி பொதுத் தேர்வு எழுத உள்ளனர். இதற்காக நடப்பு கல்வி ஆண்டில் ஆரம்பம் முதல் மாணவர்களுக்கு கூடுதலான கவனம் செலுத்தப்பட்டு பாடத்திட்டங்கள் அனைத்தும் நடத்தி முடிக்கப்பட்டுள்ளது. மேலும் டிசம்பர் மாதம் அரையாண்டு தேர்வுகள் முடிந்துள்ள நிலையில் ஜனவரி மாதம் முதல் பொதுத் தேர்வுக்கு மாணவர்கள் தயார்படுத்தப்பட்டு வருகின்றனர்.
சீனாவின் 138 பந்தய, 94 கடன் செயலிகளுக்கு தடை – மத்திய அரசு அதிரடி நடவடிக்கை!
Follow our Instagram for more Latest Updates
இந்நிலையில் ஜனவரி மாதத்தின் பிற பிற்பகுதியில் செய்முறை தேர்வுகள் நடைபெற உள்ளது. அதன் பிறகு ஏப்ரல் 6ம் தேதி முதல் 20ஆம் தேதி வரை பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கும், மார்ச் 14ஆம் தேதி முதல் ஏப்ரல் 5ம் தேதி வரை 11ஆம் வகுப்பு மாணவர்களுக்கும், மார்ச் 13ஆம் தேதி முதல் ஏப்ரல் 3ஆம் தேதி வரை 12-ஆம் வகுப்பு மாணவர்களுக்கும் பொதுத் தேர்வுகள் நடக்க உள்ளது. இதற்காக மாணவர்களின் விவரங்கள் அனைத்தும் சேகரிக்கப்பட்டு பெயர் பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது.
தற்போது பதினோராம் வகுப்பு மாணவர்களுக்கான பெயர் பட்டியல் தேர்வு துறையின் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. அதில் மாணவர்களின் விவரங்களில் ஏதேனும் மாற்றங்கள் இருந்தால் அவற்றை பிப்ரவரி 10ஆம் தேதிக்குள் தமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளி தலைமை ஆசிரியர்களும் முறைப்படி மாற்றி அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. இது தொடர்பாக, தேர்வு துறை இயக்குனர் சேதுராம வருமா அவர்கள் மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகளுக்கு சுற்றறிக்கை அனுப்பியுள்ளார்.