தமிழகத்தில் 11 ஆம் வகுப்பு தேர்வு எழுதுபவர்கள் கவனத்திற்கு – நாளை முதல் பெயர் பட்டியல் திருத்தம்!!
இந்த ஆண்டு 11 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் மாணவர்கள் தங்களது பெயர்ப் பட்டியலில் திருத்தங்களை மேற்கொள்ள கால அவகாசம் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த செயல்முறைகளை பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள் மேற்கொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
பட்டியல் திருத்தம்
தமிழகத்தில் நடப்பு கல்வியாண்டுக்கான பொதுத்தேர்வு அட்டவணை சமீபத்தில் வெளியிடப்பட்டிருந்தது. அதன்படி, 11 ஆம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு மார்ச் 14 முதல் ஏப்ரல் 5 வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது. அதே போல 11 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு முடிவுகள் மே 19 ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த தேர்வுக்கு தமிழகம் முழுவதும் இருந்து சுமார் 9 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளனர்.
வாகன ஓட்டிகள் கவனத்திற்கு – புதுச்சேரி அரசு முக்கிய உத்தரவு!!
Telegram Updates for Latest Jobs & News – Join Now
இதற்கிடையில் இந்த ஆண்டு 11 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் மாணவர்கள் தங்களது பெயர்பட்டியலில் திருத்தங்களை மேற்கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அதன்படி, பள்ளி தலைமை ஆசிரியர்கள் அனைவரும் தேர்வு எழுதும் மாணவ, மாணவிகளின் ஆலோசனைப்படி வரும் பிப்ரவரி 3 ஆம் தேதி முதல் 10 ஆம் தேதி வரை பெயர் பட்டியலில் மாற்றங்களை செய்யலாம் என்று அரசுத் தேர்வுகளின் இயக்குனர் அறிவித்துள்ளார்.