தேர்வில்லாமல் தமிழ்நாடு மெர்கன்டைல் வங்கியில் வேலை – முழு விவரம் இதோ!
1921ல் தமிழக நாடார் சமுகத்தினரால் நாடார் வங்கி என வியாபார நிதி சேவைகளுக்காக ஆரம்பிக்கப்பட்டது. இந்த வங்கியில் இருந்து Chief Learning Officer (CLO) மற்றும் Internal Ombudsman பணியிடங்களை நிரப்ப வேலைவாய்ப்பு அறிவிப்பானது சமீபத்தில் வெளியானது. இதற்க்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க வழங்கப்பட்ட கால அவகாசம் நாளையுடன் முடிவடைய உள்ளதால், இதுவரை விண்ணப்பிக்காத தகுதியானவர்கள் உடனே விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
தமிழ்நாடு மெர்கன்டைல் வங்கி வேலைவாய்ப்பு விவரங்கள்:
Chief Learning Officer (CLO) மற்றும் Internal Ombudsman பதவிக்கு என பல்வேறு பணியிடங்கள் காலியாக உள்ளன.
Chief Learning Officer (CLO) பதவிக்கு விண்ணப்பதார்கள் Graduate / Post Graduate with CAIIB முடித்திருக்க வேண்டும். இப்பணிக்கு பொது / தனியார் துறை திட்டமிடப்பட்ட வணிக வங்கிகளில் AGM மற்றும் அதற்கு மேற்பட்ட பணியாளர்கள் விண்ணப்பிக்கலாம். 3 ஆண்டுகள் இப்பணிக்குரிய ஒப்பந்த காலம் ஆகும். 50 மற்றும் அதற்கு மேல் உள்ளவர்கள் இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம். மேலும் பொது / தனியார் துறை திட்டமிடப்பட்ட வணிக வங்கிகளில் குறிப்பாக பணியாளர் பயிற்சி மையங்களில் உதவி பொது மேலாளர் / துணைத் தலைவராக 3 ஆண்டுகள் அனுபவம் உடையவர்கள் இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்.
Internal Ombudsman பதவிக்கு விண்ணப்பதார்கள் DGM பதவிக்குக் குறையாத அல்லது வங்கி / நிதித் துறை / ஒழுங்குமுறை வாரியத்திற்கு இணையான பதவிக்குக் குறையாத ஓய்வு பெற்ற அல்லது பணியாற்றும் நிர்வாகிகளாக இருக்க வேண்டும். மேலும் தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கியின் நிர்வாகிகள் / ஓய்வு பெற்ற நிர்வாகிகள் இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க தகுதியற்றவர்கள். வங்கி, ஒழுங்குமுறை, மேற்பார்வை, பணம் செலுத்துதல் மற்றும் தீர்வு அமைப்புகள் மற்றும் / அல்லது நுகர்வோர் பாதுகாப்பு போன்ற துறைகளில் குறைந்தபட்சம் 20 வருட அனுபவம் இருக்க வேண்டும். இப்பணிக்கு 65 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும். 3 ஆண்டுகள் இப்பணிக்கு ஒப்பந்த காலம் ஆகும்.
விண்ணப்பதார்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர். அவர்கள் நேரடி / வீடியோ கான்பரன்சிங் மூலம் தனிப்பட்ட நேர்காணலுக்கு அழைக்கப்படுவார்கள். நேர்காணலின் முறை, தேதி மற்றும் நேரம் தகுதியான விண்ணப்பதாரர்களுக்கு தனித்தனியாக தெரிவிக்கப்படும்.
விண்ணப்பிக்கும் முறை:
வங்கி துறையில் பணிபுரிய விரும்பும் தகுதியானவர்கள் இந்த வாய்ப்பை தவற விடாமல் உடனே கீழே வழங்கப்பட்டுள்ள ஆன்லைன் இணைய முகவரி மூலம் 10.04.2022 க்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
I am interested