தமிழகத்தில் பள்ளிகளுக்கு நாளை (நவ.27) விடுமுறை அறிவிப்பு – மாவட்ட நிர்வாகங்கள் உத்தரவு!
குமரி கடல் பகுதியில் நிலவும் வளிமண்டல சுழற்சியினால் திருவாரூர் மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களில் பெய்து வரும் தொடர் மழை காரணமாக அம்மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை (நவ.27) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
பள்ளிகள் விடுமுறை:
குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய இலங்கை கடற்பகுதியில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகம் முழுவதும் கனமழை பெய்து வருகிறது. மேலும் நவம்பர் 30ம் தேதி வரை இடி, மின்னலுடன் கூடிய கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிந்துள்ளது. அதனால் தமிழகத்திற்கு ரெட் அலர்ட் எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது. கடந்த ஒரு வாரமாக இரவு பகலாக பெய்து வரும் தொடர் மழையால் கடலோர மாவட்டங்களில் நீர் நிலைகள் நிரம்பி உபரி நீர் தாழ்வான சாலைகள் மற்றும் குடியிருப்பு பகுதிகளில் சூழ்ந்துள்ளது.
சென்னையில் வெளுத்து வாங்கும் கனமழை – போக்குவரத்து வழித்தடங்கள் இடமாற்றம் அறிவிப்பு!
இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. மேலும் தேங்கியுள்ள மழை நீருக்கு மத்தியில் வாகனங்கள் சென்று வருவது சிரமம் மிகுந்த காரியமாக உள்ளது என்று வாகன ஓட்டிகள் கவலை தெரிவிக்கின்றனர். இந்த சூழலில் மாணவர்கள் பள்ளிக்கு சென்று வர முடியவில்லை. மேலும் பள்ளிகளில் நுழைவு வாயில் மற்றும் பள்ளி வளாகங்களில் தேங்கியுள்ள மழை நீரால் மாணவர்கள் இயல்பாக சென்று வருவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக பலத்த மழை பெய்து வரும் மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டு வருகிறது.
தமிழகத்தில் 1.74 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு – புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்து!
மற்ற மாவட்டங்களை தொடர்ந்து இன்று தூத்துக்குடி, சென்னை, மயிலாடுதுறை, மதுரை, திருச்சி உள்ளிட்ட சில மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அதனை தொடர்ந்து திருவாரூர் மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களில் நாளை (26.11.2021) பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்து அம்மாவட்ட ஆட்சியர்கள் உத்தரவிட்டு உள்ளனர். ஏற்கனவே இன்றும் திருவாரூர் மற்றும் தூத்துக்குடி பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.