திருவண்ணாமலை கிரிவலம் செல்ல பொதுமக்களுக்கு தடை – மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு!!
தமிழகத்தில் கொரோனா இரண்டாம் அலை தாக்கம் வேகமாக பரவி வருகிறது. அதனை கட்டுப்படுத்த அரசு பல நடவடிக்கைகளை எடுத்துள்ளன. அதில் ஒன்றாக வழிபாட்டு தலங்களை மூடியுள்ளனர். எனவே இதன் எதிரொலியாக திருவண்ணாமலை கோவிலில் சித்ரா பெளர்ணமி கிரிவலம் வர வேண்டாம் என பக்தர்கள், பொதுமக்களுக்கு மாவட்ட ஆட்சித் தலைவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
வழிபாட்டு தலங்கள் மூடல்:
தமிழகத்தில் கொரோனா இரண்டாம் அலை தாக்கம் அதிகமாக பரவி வருகிறது. எனவே அரசு அதனை கட்டுப்படுத்த பல நடவடிக்கைகள் எடுத்துள்ளன. முதற்கட்டமாக கல்வி நிறுவனங்கள் மூடப்பட்டன. அதன் பின்னர் புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. அதில் திருவிழாக்கள், மத கூட்டங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. வழிபாட்டு தலங்களில் இரவு 8 மணி வரை மட்டுமே பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டது.
TN Job “FB Group” Join Now
இந்நிலையில் ஒவ்வொரு ஆண்டும் நடைபெறும் திருவண்ணாமலை சித்ரா பெளர்ணமி கிரிவலத்தில் ஆயிரக்கணக்கில் பக்தர்கள் பங்கேற்பார்கள். ஒவ்வொரு மாதமும் பவுர்ணமி நாட்களில் கிரிவலம் நடைபெறும். கடந்த ஆண்டு மார்ச் மாதம் கொரோனா காரணமாக மக்கள் கிரிவலம் செல்ல அனுமதிக்கப்படவில்லை. அதே போல இந்த ஆண்டும் பக்தர்கள் யாரும் வர வேண்டாம் என மாவட்ட ஆட்சித் தலைவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
தமிழக பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு முக்கிய அறிவிப்பு – கல்வி இயக்குனர் சுற்றறிக்கை!!
இந்நிலையில் தற்போது ஏப்ரல் 30 ஆம் தேதி வரை தமிழகத்தில் இரவு ஊரடங்கு, வார இறுதி நாட்களில் முழு ஊரடங்கும் அமல்படுத்தப்பட்டுள்ளது. எனவே பக்தர்கள் ஏப்ரல் 26 ஆம் தேதி அன்று சித்ரா பெர்ணமி நாள் அன்றும் ஏப்ரல் 27 ஆம் தேதி கிரிவலம் செல்ல வர வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளனர். இதற்கு மக்கள் முழு ஒத்துழைப்பு தர வேண்டும் என ஆட்சியர் கேட்டுக்கொண்டு உள்ளார்.